search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "held"

    • பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டில் இருந்து வெளியேறினார்
    • பாதுகாப்பு கேட்டு நெகமம் போலீசில் தஞ்சம்

    கோவை,

    கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள குருநெல்லிபாளையத்தை சேர்ந்தவர் அகிலாதேவி (வயது 19).

    இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டிபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் அகிலாதேவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி மணமகனை தேடி வந்தனர்.

    இது குறித்து அகிலாதேவி தனது காதலனுக்கு தகவல் தெரிவித்தார். 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.

    சம்பவத்தன்று அகிலா தேவி, கார்த்திகேயன் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் வேட்டைக்காரன்புதூரில் உள்ள கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

    இதனையடுத்து காதலர்கள் பாதுகாப்பு கேட்டு நெகமம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். நெகமம் போலீசார் காதலர்களின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தெலுங்கானா மாநிலத்தில் மனைவியின் கண் முன்னே தந்தை அனுப்பிய கூலிப்படையால் கணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். #Telangana #HonourKilling
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாருதி ராவ். இவரது மகள் அம்ருதா மாற்று ஜாதி இளைஞரான பிரணாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரத்தில் இருந்த தந்தை மாருதிராவ், கூலிப்படையை ஏவி, மகளின் கணவரை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.

    இதற்காக கூலிப்படைக்கு 1 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கூலிப்படையைச் சேர்ந்த சர்மா என்பவரை வைத்து இந்த கொலை அரங்கேற்றப்பட்டது.

    பொது இடத்தில் தன் மனைவியின் கண் முன்னேயே பிரணாய் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவானது. வெளியிடப்பட்ட சிசிடிவி காட்சி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.

    இதனை அடுத்து, குற்றவாளிகளை கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது கொலையாளி சர்மாவை காவல்துறையினர் கைது செய்தனர். பீகாரில் பதுங்கி இருந்த கொலையாளியை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்துள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து சர்மாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலைக்கு பின்னால் இருக்கும் அனைவரையும் கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். #HonourKilling #Telangana
    குஜராத் மாநிலத்தில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் இடத்தில் நடந்த அதிரடி சோதனையில் 66 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #Gujarat #FakeCurrency
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் கள்ள நோட்டுகள் அச்சடிப்பதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் அதிரடி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் கள்ள நோட்டுகள் அச்சடிப்பது உறுதி செய்யப்பட்டது.

    அந்த இடத்தில் இருந்து 66 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பு கொண்ட புதிய இரண்டாயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கள்ள நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்திய இயந்திரங்களையும் பறிமுதல் செய்த போலீசார் ஜாகித் ஷேக் என்பவரை கைது செய்துள்ளனர்.

    ஜாகித் ஷேக் 10 வருடங்களுக்கு முன்பு ஆப்ரிக்காவில் இருந்து இந்தியா வந்தவர் என்பதும், கடந்த 1 மாதங்களாக கள்ள நோட்டுகளை அச்சடித்து பயன்படுத்தி வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #Gujarat #FakeCurrency
    ×