என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓணம் பூஜைக்கு பக்தர்கள் வர வேண்டாம் என சபரிமலை நிர்வாகம் அறிவுறுத்தல்
Byமாலை மலர்21 Aug 2018 12:40 PM GMT (Updated: 21 Aug 2018 12:40 PM GMT)
பாதைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. #KeralaFlood #Sabarimala
திருவனந்தபுரம்:
கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஒட்டுமொத்த மாநிலமும் கடுமையான பேரழிவை சந்தித்தது. 10 நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ள நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இந்த பேரழிவால் சுமார் 250-க்கும் அதிகமான மக்கள் பலியாகினர்.
கேரளாவில் ஓடும் பல ஆறுகளில் இன்னும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், ஓணம் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஓணம் பண்டிகையை ஒட்டி வரும் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடை திறக்கபட உள்ளது.
எனினும், பம்பை ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதாலும், சபரிமலைக்கு செல்லும் மலைப்பாதையில் மரங்கள் விழுந்து கிடப்பதால் பாதைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால், பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என சபரிமலை தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X