search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ayappan"

    பாதைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. #KeralaFlood #Sabarimala
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஒட்டுமொத்த மாநிலமும் கடுமையான பேரழிவை சந்தித்தது. 10 நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ள நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இந்த பேரழிவால் சுமார் 250-க்கும் அதிகமான மக்கள் பலியாகினர்.

    கேரளாவில் ஓடும் பல ஆறுகளில் இன்னும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், ஓணம் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஓணம் பண்டிகையை ஒட்டி வரும் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடை திறக்கபட உள்ளது.

    எனினும், பம்பை ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதாலும், சபரிமலைக்கு செல்லும் மலைப்பாதையில் மரங்கள் விழுந்து கிடப்பதால் பாதைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால், பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என சபரிமலை தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. 
    ×