search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தன்னை கடித்த பாம்பை பழிதீர்த்த நபர் - மெடிக்கல் மிராக்கிள் என மிரண்ட டாக்டர்
    X

    தன்னை கடித்த பாம்பை பழிதீர்த்த நபர் - மெடிக்கல் மிராக்கிள் என மிரண்ட டாக்டர்

    உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹர்தோய் பகுதியில் தன்னை கடித்த பாம்பை பதிலுக்கு கடித்துக் குதறி விவசாயி பழிதீர்த்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த சோனேலால் என்ற விவசாயி நேற்று தனது வயலில் இருந்த போது, பாம்பு ஒன்று கடித்துள்ளது. உடனே, சற்றும் தாமதிக்காமல் சோனேலால் பாம்பின் தலையை கடித்து குதறியுள்ளர். பின்னர், மயக்க நிலைக்கு சென்று கீழே விழுந்தார்.

    இதனை கண்ட அவரது சகோதரர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சோனேலாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பின்னர் அவர் சுயநினைவுக்கு திரும்பினார். இது போன்ற சம்பவத்தை இதுவரை பார்த்ததே இல்லை என மருத்துவர்கள் மிரட்சியுடன் தெரிவித்துள்ளனர். #TamilNews
    Next Story
    ×