search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனோகர் பாரிக்கரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
    X

    மனோகர் பாரிக்கரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

    உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை சந்தித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உடல்நலம் விசாரித்தார்.
    மும்பை:

    கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் இருந்து வருகிறார். கடந்த 15-ம் தேதி அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டு, கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    ஆனால், அவருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்பதால், அவரை மேல் சிகிச்சைக்காக மும்பைக்கு அனுப்ப பரிந்துரைத்தனர். இதையடுத்து, மனோகர் பாரிக்கர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    முதல்வர் மனோகர் பாரிக்கரை மருத்துவமனைக்கு நேற்று நேரில் சென்று பிரதமர் மோடி உடல் நலம் விசாரித்தார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஆளுநர் வித்தியாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சதாலே உள்ளிட்டோரும் நலம் விசாரித்தனர்.

    இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மருத்துவமனைக்கு சென்று மனோகர் பாரிக்கரிடம் உடல்நலம் விசாரித்தார். #TamilNews
    Next Story
    ×