என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சஸ்பெண்டு செய்யப்பட்டதால் நீதிபதி தற்கொலை
Byமாலை மலர்23 Nov 2017 6:33 AM GMT (Updated: 23 Nov 2017 6:33 AM GMT)
திருப்பதியில் சஸ்பெண்டு செய்யப்பட்டதால் மனஉளைச்சலுக்கு ஆளான நீதிபதி தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் மசூலிபட்டினத்தை சேர்ந்தவர் சதானந்தமூர்த்தி (வயது 48). இவர், திருப்பதி சிவில் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
திருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு சென்ற போது அர்ச்சகர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதனால் அவர், வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடந்தார்.
சஸ்பெண்டு செய்யப்பட்டதால், தனக்கு உள்ள நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டதாக கருதிய அவர், மனஉளைச்சலுக்கு ஆளாகி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அவரின் குடும்பத்தினர் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாக போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட நீதிபதிக்கு அன்னபூர்ணம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் பனராசில் ஐ.ஐ.டி.யும், மகள் அமெரிக்காவில் டாக்டருக்கும் படித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் மசூலிபட்டினத்தை சேர்ந்தவர் சதானந்தமூர்த்தி (வயது 48). இவர், திருப்பதி சிவில் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
திருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு சென்ற போது அர்ச்சகர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதனால் அவர், வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடந்தார்.
சஸ்பெண்டு செய்யப்பட்டதால், தனக்கு உள்ள நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டதாக கருதிய அவர், மனஉளைச்சலுக்கு ஆளாகி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அவரின் குடும்பத்தினர் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாக போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட நீதிபதிக்கு அன்னபூர்ணம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் பனராசில் ஐ.ஐ.டி.யும், மகள் அமெரிக்காவில் டாக்டருக்கும் படித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X