என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துபாயில் இருந்து கேரளாவுக்கு ரூ. 15 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்தல்
Byமாலை மலர்21 Nov 2017 11:39 AM GMT (Updated: 21 Nov 2017 11:39 AM GMT)
துபாயில் இருந்து கேரளாவுக்கு ரூ. 15 கோடி மதிப்பிலான போதை பொருளை கடத்தி வந்த பிரேசில் வாலிபரை அதிகாரிகள் கைது செய்தனர்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் கொச்சி நெடும்பாச்சேரி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு துபாயில் இருந்து வந்த விமானம் தரை இறங்கியது. அதில் இருந்து இறங்கி வந்த வெளிநாட்டு வாலிபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
அவரை தனியாக அழைத்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் தனது பனியன், உள்ளாடை, ஷூ ஆகியவற்றில் கொக்கைன் எனப்படும் போதை பொருளை பேப்பரில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
இந்த போதை பொருள் முன்றே முக்கால் கிலோ எடை கொண்டது. இதன் மதிப்பு ரூ. 15 கோடி ஆகும் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்
அந்த வாலிபரிடம் அதிகாரிகள் விசாரித்த போது அவரது பெயர் அலெக்ஸ் விகாலெண்ட் பெர்ணான்டஸ் (30). பிரேசில் நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவரை அதிகாரிகள் கைது செய்தனர்
இவர் பிரேசிலில் இருந்து துபாய்க்கு விமானத்தில் வந்து அங்கிருந்து விமானம் மூலம் கொச்சிக்கு இந்த போதை பொருளை கடத்தி வந்துள்ளார். இந்த போதை பொருள் கோவா எர்ணாகுளம், கோவை, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேர நடனம் நடைபெறும் விடுதிகளுக்கு கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கேரளாவில் இதுவரை 200, 300 கிராம் முதல் அரை கிலோ வரை தான் போதை பொருள் கடத்தி வரப்பட்டதை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது தான் மிகப்பெரிய அளவில் மூன்றே முக்கால் கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரள மாநிலம் கொச்சி நெடும்பாச்சேரி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு துபாயில் இருந்து வந்த விமானம் தரை இறங்கியது. அதில் இருந்து இறங்கி வந்த வெளிநாட்டு வாலிபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
அவரை தனியாக அழைத்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் தனது பனியன், உள்ளாடை, ஷூ ஆகியவற்றில் கொக்கைன் எனப்படும் போதை பொருளை பேப்பரில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
இந்த போதை பொருள் முன்றே முக்கால் கிலோ எடை கொண்டது. இதன் மதிப்பு ரூ. 15 கோடி ஆகும் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்
அந்த வாலிபரிடம் அதிகாரிகள் விசாரித்த போது அவரது பெயர் அலெக்ஸ் விகாலெண்ட் பெர்ணான்டஸ் (30). பிரேசில் நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவரை அதிகாரிகள் கைது செய்தனர்
இவர் பிரேசிலில் இருந்து துபாய்க்கு விமானத்தில் வந்து அங்கிருந்து விமானம் மூலம் கொச்சிக்கு இந்த போதை பொருளை கடத்தி வந்துள்ளார். இந்த போதை பொருள் கோவா எர்ணாகுளம், கோவை, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேர நடனம் நடைபெறும் விடுதிகளுக்கு கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கேரளாவில் இதுவரை 200, 300 கிராம் முதல் அரை கிலோ வரை தான் போதை பொருள் கடத்தி வரப்பட்டதை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது தான் மிகப்பெரிய அளவில் மூன்றே முக்கால் கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X