என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன்- இன்று மாலை உடன்பாடு
Byமாலை மலர்13 March 2019 7:33 AM GMT (Updated: 13 March 2019 7:33 AM GMT)
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைகிறது. இதற்கான கூட்டணி உடன்பாடு இன்று மாலை கையெழுத்தாகிறது. #LSPolls #ADMK #GKVasan #ADMKAlliance
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா, தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிகட்சி ஆகியவை உள்ளன.
இந்த கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரசையும் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வற்புறுத்தி வந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் வீட்டுக்கு சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடந்தது.
இன்று மதியம், ஓ.பன்னீர் செல்வம் சென்னை திரும்புகிறார். அதன்பிறகு தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. மயிலாடுதுறை தொகுதி த.மா.கா.வுக்கு கிடைக்கும் என்று அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் ஜி.கே.வாசன் கையெழுத்திடுவதன் மூலம் ஜி.கே.வாசன், அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் முதல் முறையாக இணைகிறார். இதனால் இந்த கூட்டணியில் கட்சியின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. #LSPolls #ADMK #GKVasan #ADMKAlliance
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா, தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிகட்சி ஆகியவை உள்ளன.
இந்த கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரசையும் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வற்புறுத்தி வந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் வீட்டுக்கு சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடந்தது.
பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாகவும், இன்று காலை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியூரில் இருப்பதால் இன்று காலை கையெழுத்தாகவில்லை.
இன்று மதியம், ஓ.பன்னீர் செல்வம் சென்னை திரும்புகிறார். அதன்பிறகு தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. மயிலாடுதுறை தொகுதி த.மா.கா.வுக்கு கிடைக்கும் என்று அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் ஜி.கே.வாசன் கையெழுத்திடுவதன் மூலம் ஜி.கே.வாசன், அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் முதல் முறையாக இணைகிறார். இதனால் இந்த கூட்டணியில் கட்சியின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. #LSPolls #ADMK #GKVasan #ADMKAlliance
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X