search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்
    X

    ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்

    பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க பதவி ஏற்பார் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
    தேனி:

    தேனியில் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேனி பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் குமார் வெற்றிபெற்றதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மக்கள் பணத்துக்கு மயங்கி விட்டனர். நாங்களும் பணம் கொடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும். காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்றிருந்தால் கூட எனக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

    இனி வரும் தேர்தல்களில் பணம் கொடுத்தால் மட்டுமே மக்களை வாக்களிக்க வைக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகி விட்டது. இத ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. தமிழகம் முழுவதும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற போது தேனி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது எப்படி? இது தேர்தல் ஆணையத்தின் ஆசியால்தான் நடந்துள்ளது. இந்தியாவில் தேர்தல் ஆணையம் உள்ளதா? என்பதே சந்தேகமாக உள்ளது.


    இந்த வெற்றியின் மூலம் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் தனக்குள்ள செல்வாக்கை பிரதமர் மோடியிடம் தெரிவிப்பார். அதன் மூலம் பா.ஜனதா ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்.

    எங்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் கொடுத்தது தேர்தல் தோல்விக்கு மற்றொரு காரணமாக அமைந்து விட்டது. இந்த சின்னத்தை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. தேர்தலில் எனக்கும் எங்களது கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றி. தோல்வியால் சோர்ந்து போகவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட அமேதியில் தோற்றுப் போயுள்ளார். இதே போல் தமிழகத்தில் தமிழிசை, எச்.ராஜா, அன்புமணி ராமதாஸ் போன்றோரும் தோற்றுப் போயுள்ளனர். தோல்வியில் இருந்து துவண்டு விடாமல் மீண்டும் எங்களது பயணம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×