search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்னார்குடியில் தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து சேதம்
    X

    மன்னார்குடியில் தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து சேதம்

    மன்னார்குடியில் தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து சேதம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி ஐவர்சமாது பகுதியை சேர்ந்தவர் அமுதா. கணவரை இழந்த இவர் தன் தாயாருடன் வசித்து வந்தார்.

    நேற்று இரவு உடல்நலக் குறைவு காரணமாக, வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்றிருந்தாராம். அப்போது பூட்டிய வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட சிலர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து, மன்னார் குடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அவரது வீடு முற்றிலும் பற்றி எரிய தொடங்கியது. சுமார் 20 அடிக்கும் மேல் தீ எரிந்தது. இதனால் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர். இதற்குள் கூத்தாநல்லூரில் இருந்து, மற்றொரு தீயணைப்பு வாகனம் விரைந்து வந்தது, சுமார் 2 மணிநேரம், கடும் போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது, வேகமாக பரவிய தீயினால் அருகிலிருந்த ராஜேந்திரன் என்பவரின் வீடும் தீப்பிடித்து கடும் சேதமடைந்தது.

    மன்னார்குடி டி.எஸ்.பி.அசோகன், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர், மேலும் தீவிபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×