search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தது - ஜெ., நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் மரியாதை
    X

    சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தது - ஜெ., நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் மரியாதை

    கடந்த மே மாதம் 23-ம் தேதி கூடிய தமிழக சட்டசபை பெரிய அளவில் பிரச்சனைகள் இன்றி அமைதியாக இன்று முடிவடைந்துள்ளது. #TNAssembly
    சென்னை:

    தமிழக சட்டசபை கடந்த மே மாதம் 23-ம் தேதி கூடியது. அனைத்து துறைகளின் மீதான மானியக்கோரிக்கைகள் இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டன. உறுப்பினரின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.

    33 நாட்கள் நடந்த இந்த கூட்டத்தொடரில் லோக் ஆயுக்தா உள்பட 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தொடர் நிறைவடைந்ததாக அறிவித்த சபாநாயகர், துரை முருகன் அவையை கலகலப்பாக்கினார் என குறிப்பிட்டார். திமுக உறுப்பினர் மஸ்தான் அதிக கேள்விகளை கேட்டுள்ளார்.

    கூட்டத்தொடர் முடிந்ததை அடுத்து, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்ற முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 
    Next Story
    ×