search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போதையில் தள்ளிவிட்டதால் தலையில் அடிபட்டவர் பலி- நண்பர்கள் 2 பேர் கைது
    X

    போதையில் தள்ளிவிட்டதால் தலையில் அடிபட்டவர் பலி- நண்பர்கள் 2 பேர் கைது

    சென்னை அண்ணாசாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட அடிதடி தகராறில் போதையில் தள்ளிவிட்டதால் தலையில் அடிபட்டவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    சென்னை:

    சென்னை அண்ணா சாலை ஓயிட்ஸ் ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று மதியம் அந்த பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன், கார்த்திக், அசோக் ஆகியோர் அந்த மதுக்கடைக்கு சென்று மது அருந்தினார்கள்.

    மாலை 4 மணி வரை அவர்கள் மது குடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. அசோக்கின் சட்டை பைக்குள் ஹரி கிருஷ்ணன் கையை விட்டு பணத்தை எடுக்க முயன்றதாக தெரிகிறது.

    இதனால் ஒருவருக்கொருவர் தள்ளிவிட்டனர். அப்போது ஹரி கிருஷ்ணன் தடுமாறி கீழே விழுந்தார். அவரது முகம், தலை பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.

    இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஹரி கிருஷ்ணன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனால் திடீரென அவர் 201-வது வார்டில் இருந்து மாயமாகிவிட்டார். அவரை மருத்துவமனை ஊழியர்கள் பல்வேறு இடங்களில் தேடினார்கள்.

    இந்த நிலையில் மருத்துவமனை வெளியில் நுழைவு வாயில் அருகே நடைபாதையில் ஹரி கிருஷ்ணன் கிடந்தார். உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் அவரை தூக்கி சென்று பரிசோதித்தனர்.

    அப்போது அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக அண்ணா சாலை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குபதிவு செய்து விசாரித்தார்.

    ஹரி கிருஷ்ணனை தள்ளி விட்டதாக அவரது நண்பர்கள் கார்த்திக், அசோக் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×