என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை
Byமாலை மலர்18 April 2018 8:39 AM GMT (Updated: 18 April 2018 8:39 AM GMT)
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மை காலமாக அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக ஐகோர்ட்டு நீதிபதிகள் கூறினார்கள்.
சென்னை:
நிர்பயா நிதியின் மூலமாக தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக செயல் திட்டங்களை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், தண்டபாணி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் சில வேதனையான கருத்துக்களை தெரிவித்தனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மை காலமாக தமிழகத்தில் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக நீதிபதிகள் கூறினார்கள்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தகுந்த நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகின்றனர்’ என்று பதில் அளித்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘பெண் கொலை, சாலையில் செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பு, பாலியல் குற்றங்கள் என்று இதுவரை தமிழகம் முழுவதும் பதிவான வழக்குகளின் விவரங்களை, அறிக்கையாக தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
பின்னர் வழக்கு விசாரணையை ஜூன் 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். #tamilnews
நிர்பயா நிதியின் மூலமாக தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக செயல் திட்டங்களை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், தண்டபாணி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் சில வேதனையான கருத்துக்களை தெரிவித்தனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மை காலமாக தமிழகத்தில் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக நீதிபதிகள் கூறினார்கள்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தகுந்த நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகின்றனர்’ என்று பதில் அளித்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘பெண் கொலை, சாலையில் செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பு, பாலியல் குற்றங்கள் என்று இதுவரை தமிழகம் முழுவதும் பதிவான வழக்குகளின் விவரங்களை, அறிக்கையாக தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
பின்னர் வழக்கு விசாரணையை ஜூன் 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X