search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலத்தில் ரெயில் முன்பு பாய்ந்து இளம்பெண் தற்கொலை
    X

    திருமங்கலத்தில் ரெயில் முன்பு பாய்ந்து இளம்பெண் தற்கொலை

    திருமங்கலத்தில் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்தார். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்த உதயகுமார் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அங்காள ஈஸ்வரி (வயது 29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று திருமங்கலம் பாண்டியன் நகர் ரெயில்வே கேட் பகுதிக்கு அங்காள ஈஸ்வரி வந்தார். அப்போது திருநெல்வேலி ஜம்முதாவி ரெயில் அங்கு வந்தது.

    யாரும் எதிர்பாராத விதமாக, திடீரென அங்காள ஈஸ்வரி ரெயில் முன்பு பாய்ந்தார். ரெயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விருதுநகர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

    குடும்ப பிரச்சனை காரணமாக அங்காள ஈஸ்வரி தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×