என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஷேர் ஆட்டோ மோதல் - சிறுவன் பலி
காஞ்சீபுரம்:
உத்திரமேரூர் அருகே உள்ள வேங்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் (35). அதே பகுதியில் மளிகைகடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா, மகள் அன்ஷிகா, 3 வயது மகன் தேசுகிருஷ்ணன்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சாமி கும்பிட அய்யப்பன் மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் காஞ்சீபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
ஓரிக்கை பகுதியில் வந்தபோது எதிரே வந்த ஷேர் ஆட்டோ திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பெற்றோர் கண் முன்ணே தேசுகிருஷ்ணன் பரிதாபமாக பலியானான்.
அய்யப்பன், அவரது மனைவி கவிதா, மகள் அன்ஷிகா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 3 பேரும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தினை ஏற்படுத்திய ஷேர் ஆட்டோ டிரைவரை காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் கைது செய்தனர்.
வந்தவாசியை சேர்ந்தவர் ரவிக்குமார் (32), வியாபாரி. இவர் காரில் சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை சித்தேரிமேடு என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது முன்னால் சென்ற லாரி முறையான சிக்னல் போடாமல் சாலையில் திரும்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய கார் லாரி மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்