search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்தது ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம்
    X

    சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்தது ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம்

    பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கோரி சசிகலா அளித்த மனுவை ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம் தள்ளுபடி செய்தது. #Sasikala #JayalalithaDeath
    சென்னை:

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. பல்வேறு தரப்பினருக்கும் சம்மன் அளித்து அவர்களிடம் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வருகின்றது.

    இந்நிலையில், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா தனது வாக்குமூலத்தை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய ஆறுமுகச்சாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சசிகலா சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதில் இழுத்தடிக்கப்பட்டது. இந்நிலையில், கால அவகாசம் கோரி சசிகலா அளித்த மனுவை விசாரணை ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது.

    ஏற்கனவே, ஐந்து முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டும் சசிகலா பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவில்லை என கூறியுள்ள ஆணையம், உரிய காலத்திற்குள் தாக்கல் செய்யப்படால் சசிகலாவிடம் நேரில் சென்று விசாரணை நடத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. #Sasikala #JayalalithaDeath
    Next Story
    ×