என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு- நாராயணசாமி
Byமாலை மலர்3 March 2018 9:56 AM GMT (Updated: 3 March 2018 9:57 AM GMT)
கார்த்தி சிதம்பரம் மீது மத்திய பாரதிய ஜனதா அரசு அரசியல் பழிவாங்கும் நோக்கோடு வழக்குப்பதிவு செய்துள்ளது என்று நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:
புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீது மத்திய பா.ஜனதா அரசு அரசியல் பழிவாங்கும் நோக்கோடு வழக்குப்பதிவு செய்துள்ளது.
ப.சிதம்பரம் தொடர்ந்து பா.ஜனதாவையும், பொருளாதார கொள்கைகளையும் நாடாளுமன்றத்தில் விமர்சித்து வருகிறார். இதற்காகவே பழிவாங்கும் நோக்கோடு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கிற்கு எந்த ஆதாரமும் இல்லை. புகார்தாரரான இந்திரா முகர்ஜி மகளை கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ளார். இவ்வழக்கில் நீதிமன்றம் உண்மையை நிலைநாட்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வார கெடு கொடுத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகம், தமிழகம்- புதுவைக்கு காவிரி விவகாரத்தில் துரோகம் இழைத்து வந்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பிரதமரை நாங்கள் சந்தித்தபோது வலியுறுத்தி உள்ளோம். மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்.
இதுதொடர்பாக தமிழக அமைச்சர்கள் சந்திக்க நேரம் கேட்டபோது பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை. ஜனநாயகத்தில் மக்கள் பிரச்சனையை பேச யார் நேரம் கேட்டாலும், பிரதமர் நேரம் ஒதுக்கி பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீது மத்திய பா.ஜனதா அரசு அரசியல் பழிவாங்கும் நோக்கோடு வழக்குப்பதிவு செய்துள்ளது.
ப.சிதம்பரம் தொடர்ந்து பா.ஜனதாவையும், பொருளாதார கொள்கைகளையும் நாடாளுமன்றத்தில் விமர்சித்து வருகிறார். இதற்காகவே பழிவாங்கும் நோக்கோடு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கிற்கு எந்த ஆதாரமும் இல்லை. புகார்தாரரான இந்திரா முகர்ஜி மகளை கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ளார். இவ்வழக்கில் நீதிமன்றம் உண்மையை நிலைநாட்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வார கெடு கொடுத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகம், தமிழகம்- புதுவைக்கு காவிரி விவகாரத்தில் துரோகம் இழைத்து வந்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பிரதமரை நாங்கள் சந்தித்தபோது வலியுறுத்தி உள்ளோம். மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்.
இதுதொடர்பாக தமிழக அமைச்சர்கள் சந்திக்க நேரம் கேட்டபோது பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை. ஜனநாயகத்தில் மக்கள் பிரச்சனையை பேச யார் நேரம் கேட்டாலும், பிரதமர் நேரம் ஒதுக்கி பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X