search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் செயின் பறிப்பு
    X

    தஞ்சை அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் செயின் பறிப்பு

    தஞ்சை அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர், கள்ள பெரம்பூர் அருகே உள்ள களிமேடுவைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 34). தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சிவரஞ்சனி.

    இந்நிலையில் இருவரும் நேற்று இரவு வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கினர். நள்ளிரவில் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை நோட்டம் விட்டு கொண்டிருந்த மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்தனர். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிவரஞ்சனி கழுத்தில் கிடந்த தாலி செயின் உள்பட 10 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். காலையில் எழுந்தவுடன் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவரஞ்சனி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். #tamilnews

    Next Story
    ×