என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவையாறு அருகே பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது
திருவையாறு:
திருவையாறை அடுத்த வெள்ளாம் பெரம்பூர் அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் காசிராஜன். இவரது மகள் வினிதா (வயது 23). இவர் எம்.ஏ. பட்டதாரி. இவரும் திருவையாறை அடுத்த முல்லைக்குடியை சேர்ந்த போசாங்கு மகன் மணிகண்டன் (24) என்பவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் இருவரும் நெருங்கி பழகியதில் வினிதா 7 மாதம் கர்ப்பமானார். இதனால் மணிகண்டனிடம் வினிதா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். அதற்கு மணிகண்டன் மறுத்து காலம் கடத்தி வந்தார். இதுபற்றி மணிகண்டன் வீட்டிற்கு தெரியவந்ததும் மணிகண்டனின் தந்தை போசாங்கு, தாய் பஞ்சவர்ணம், அக்காள் செந்தமிழ்செல்வி ஆகிய 3 பேரும் வினிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுபற்றி வினிதா திருவையாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் அஞ்சலிதேவி போசாங்கு, பஞ்சவர்ணம், செந்தமிழ்செல்வி மற்றும் மணிகண்டன் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய போசாங்கு, பஞ்சவர்ணம், செந்தமிழ்செல்வி ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்