என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒட்டப்பிடாரம் அருகே லாரி மீது வேன் மோதல்: பெண் உள்பட 2 பேர் பலி
Byமாலை மலர்7 Dec 2017 5:09 AM GMT (Updated: 7 Dec 2017 5:09 AM GMT)
ஒட்டப்பிடாரம் அருகே இன்று காலை லாரி மீது வேன் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டப்பிடாரம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டபட்டி மற்றும் பஞ்சிகாலிபட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டு வந்தனர்.
அந்த வேன் இன்று காலை 7 மணி அளவில் ஓட்டப்பிடாரம் அடுத்த புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் வேன் எதிர்பாராதவிதமாக பயங்கர வேகத்தில் மோதியது. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது.
இந்த விபத்தில் வேனில் இருந்த லெட்சுமி (வயது 57), நவீன் (23) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து புதியபுத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டபட்டி மற்றும் பஞ்சிகாலிபட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டு வந்தனர்.
அந்த வேன் இன்று காலை 7 மணி அளவில் ஓட்டப்பிடாரம் அடுத்த புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் வேன் எதிர்பாராதவிதமாக பயங்கர வேகத்தில் மோதியது. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது.
இந்த விபத்தில் வேனில் இருந்த லெட்சுமி (வயது 57), நவீன் (23) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து புதியபுத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X