என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆறுமுகநேரியில் கஞ்சாவுடன் வாலிபர் கைது: மற்றொருவர் தப்பி ஓட்டம்
Byமாலை மலர்27 May 2017 2:21 PM GMT (Updated: 27 May 2017 2:21 PM GMT)
ஆறுமுகநேரியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சாவுடன் நிண்டு கொண்டிருந்த வாலிபரை கைது செய்தனர். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம் மற்றும் போலீசார் நேற்று மாலையில் அடைக்கலாபுரம் சாலை மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு பைக்கில் 2 பேர் வந்தனர். அவர்கள் போலீசாரைக் கண்டதும் பைக்கை திருப்பி கொண்டு வேகமாக சென்றனர்.
உடனே போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவர்களில் பைக்கை ஓட்டிய வாலிபர் பிடிபட்டார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பைக்கை சோதனையிட்டபோது சாக்குப்பையின் உள்ளே பிளாஸ்டிக் டப்பாவுக்குள் 1 கிலோ 700 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் பிடிபட்ட நபர் ஆறுமுகநேரி எஸ்.எஸ்.கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் ஜெயமாலைமுத்து (வயது20) என்பதும் விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
மேலும் தப்பியோடிய நபர் ஆறுமுகநேரி காணியாளர் தெரு சக்திவேல் மகன் பாலமுருகன் (30) என்பது தெரிந்தது. அவரை போலீசார் வலை வீசித்தேடி வருகின்றனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிச்சையா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம் மற்றும் போலீசார் நேற்று மாலையில் அடைக்கலாபுரம் சாலை மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு பைக்கில் 2 பேர் வந்தனர். அவர்கள் போலீசாரைக் கண்டதும் பைக்கை திருப்பி கொண்டு வேகமாக சென்றனர்.
உடனே போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவர்களில் பைக்கை ஓட்டிய வாலிபர் பிடிபட்டார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பைக்கை சோதனையிட்டபோது சாக்குப்பையின் உள்ளே பிளாஸ்டிக் டப்பாவுக்குள் 1 கிலோ 700 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் பிடிபட்ட நபர் ஆறுமுகநேரி எஸ்.எஸ்.கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் ஜெயமாலைமுத்து (வயது20) என்பதும் விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
மேலும் தப்பியோடிய நபர் ஆறுமுகநேரி காணியாளர் தெரு சக்திவேல் மகன் பாலமுருகன் (30) என்பது தெரிந்தது. அவரை போலீசார் வலை வீசித்தேடி வருகின்றனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிச்சையா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X