என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நடிகை கடத்தல் வழக்கு: ஜாமீனில் விடுதலையான திலீப்பிடம் இன்று மீண்டும் விசாரணை
Byமாலை மலர்15 Nov 2017 1:04 PM GMT (Updated: 15 Nov 2017 1:04 PM GMT)
நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையான நடிகர் திலீப்பிடம் ஆலுவா போலீஸ் கிளப்பில் இன்று மீண்டும் விசாரணை நடந்தது.
கேரள மாநிலம் கொச்சியில் பிரபல நடிகையை ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இவர் தான் நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி என்று போலீசார் தெரிவித்தனர். எனவே குற்றபத்திரிகையில் இவரின் பெயர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்படும் என்று தகவல் வெளியானது.
இதற்கிடையே நடிகர் திலீப்புக்கு கேரள ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி அவர் விடுவிக்கப்பட்டார்.
ஜாமீனில் வெளிவந்த திலீப், நடிகை கடத்தல் சம்பவம் நடந்த போது தான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறியிருந்தார். இது தொடர்பாக ஏற்கனவே அறிக்கையும் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இன்று கேரள போலீசார் திலீப்பிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். இதற்காக அவர் ஆலுவா போலீஸ் கிளப்பிற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் பிஜூ பவுலோஸ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திலீப், ஆஸ்பத்திரியில் தங்கியது உண்மைதானா? என்பது உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த விசாரணைக்கு பின்னரே நடிகை கடத்தல் வழக்கில் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது,.
இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இவர் தான் நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி என்று போலீசார் தெரிவித்தனர். எனவே குற்றபத்திரிகையில் இவரின் பெயர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்படும் என்று தகவல் வெளியானது.
இதற்கிடையே நடிகர் திலீப்புக்கு கேரள ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி அவர் விடுவிக்கப்பட்டார்.
ஜாமீனில் வெளிவந்த திலீப், நடிகை கடத்தல் சம்பவம் நடந்த போது தான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறியிருந்தார். இது தொடர்பாக ஏற்கனவே அறிக்கையும் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இன்று கேரள போலீசார் திலீப்பிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். இதற்காக அவர் ஆலுவா போலீஸ் கிளப்பிற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் பிஜூ பவுலோஸ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திலீப், ஆஸ்பத்திரியில் தங்கியது உண்மைதானா? என்பது உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த விசாரணைக்கு பின்னரே நடிகை கடத்தல் வழக்கில் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது,.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X