என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தாய்லாந்து காடுகளில் உருவாகும் ‘கும்கி-2’ படத்தில் நாயகியான ஜீவிதா மகள்
Byமாலை மலர்15 Sep 2017 4:00 AM GMT (Updated: 15 Sep 2017 4:00 AM GMT)
பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கும்கி-2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நாயகியாக நடிகை ஜீவிதா மகள் ஷிவானி நடித்து வருகிறார்.
பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான ‘கும்கி’ வெற்றிப்படமாக அமைந்தது. இதில் விக்ரம்பிரபு, லட்சுமி மேனன் ஆகியோர் அறிமுகமானார்கள். பின்னர் ‘கயல்’, ‘தொடரி’ படங்களை இயக்கினார்.
தற்போது மீண்டும் ‘கும்கி’ படத்தின் 2-வது பாகத்தை பிரபுசாலமன் இயக்கி வருகிறார். இதில் ‘ரா ரா ராஜசேகர்’ படத்தில் நடித்த மதி கதாநாயகனாக நடிக்கிறார். இவர் இயக்குனர் லிங்குசாமியின் சகோதரி மகன். மதியின் ஜோடியாக நடிகர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானி நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு கடந்த வாரம் தாய்லாந்தில் தொடங்கியது. அங்குள்ள அடர்ந்த காடுகளில் யானை கூட்டங்களுடன் படமாகி வருகிறது. இதுவும் யானையை மையமாக கொண்ட படம். எனவே, படப்பிடிப்பை அங்கு தொடங்கி இருக்கிறார்கள். யானைகள் தொடர்பான அனைத்து காட்சிகளையும் படமாக்கிய பிறகு இந்தியா திரும்புகிறார்கள்.
உச்சக்கட்ட காட்சிகளும் தாய்லாந்து காடுகளிலேயே படமாக்கப்படுகிறது. சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார்.
தற்போது மீண்டும் ‘கும்கி’ படத்தின் 2-வது பாகத்தை பிரபுசாலமன் இயக்கி வருகிறார். இதில் ‘ரா ரா ராஜசேகர்’ படத்தில் நடித்த மதி கதாநாயகனாக நடிக்கிறார். இவர் இயக்குனர் லிங்குசாமியின் சகோதரி மகன். மதியின் ஜோடியாக நடிகர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானி நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு கடந்த வாரம் தாய்லாந்தில் தொடங்கியது. அங்குள்ள அடர்ந்த காடுகளில் யானை கூட்டங்களுடன் படமாகி வருகிறது. இதுவும் யானையை மையமாக கொண்ட படம். எனவே, படப்பிடிப்பை அங்கு தொடங்கி இருக்கிறார்கள். யானைகள் தொடர்பான அனைத்து காட்சிகளையும் படமாக்கிய பிறகு இந்தியா திரும்புகிறார்கள்.
உச்சக்கட்ட காட்சிகளும் தாய்லாந்து காடுகளிலேயே படமாக்கப்படுகிறது. சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X