search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சிம்புவுக்காக மீண்டும் குரல் கொடுத்த இளையராஜா
    X

    சிம்புவுக்காக மீண்டும் குரல் கொடுத்த இளையராஜா

    இசைஞானி இளையராஜா மீண்டும் சிம்பு படத்தில் அவருக்காக ஒரு பாடலை பாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    சிம்பு நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, சானாகான், நீது சந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். சிம்பு இப்படத்தில் நான்கு கெட்டப்புகளிலும் நடிக்கிறார்.

    யுவன் இசையமைக்கும் இப்படத்தில் இளையராஜா ஒரு பாடல் பாடியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘ரோட்டுல வண்டி ஓடுது’ என்ற அந்த பாடலை இளையராஜாவின் பிறந்தநாளான ஜுன் 2-ந் தேதி வெளியிடவிருக்கிறார்களாம். ஏற்கெனவே, சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ படத்தில் இளையராஜா ‘மச்சான் மச்சான்’ என்ற பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் வருகிற ரம்ஜானையொட்டி ஜுன் 23-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்திற்கான வியாபாரம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிங்கிள் வெளியீட்டுக்கு பிறகு விரைவில் மொத்த பாடல்களையும் வெளியிடவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×