என் மலர்
- 2026 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு HOMEBOUND திரைப்படம் தேர்வாகியுள்ளது.
- கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்படும் 2 இளைஞர்கள் பற்றிய கதையை இப்படத்தில் காட்டியுள்ளனர்.
98வது ஆஸ்கர் அகாடமி விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15 இல் நடைபெற உள்ளது.இந்நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு HOMEBOUND திரைப்படம் தேர்வாகியுள்ளது.
சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின் கீழ் நாமினேஷனுக்கான தகுதிப் பட்டியலில் இப்படம் தேர்வாகியுள்ளது.
கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்படும் 2 இளைஞர்கள் பற்றிய கதையை உயிரோட்டத்துடன் இப்படத்தில் காட்டியுள்ளனர். குறிப்பாக தலித் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் இந்திய சமூகத்தில் எப்படி பாகுபாடோடு நடத்தப்படுகிறார்கள் என்பதை இப்படம் நம் கண்முன் எடுத்துக்காட்டியது.
இந்நிலையில், இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் போட்டிக்குத் தகுதிபெற்ற 'ஹோம்பவுண்ட்' திரைப்படம் மீது கதைத்திருட்டு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான பூஜா சாங்கோய்வாலா, தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் நெட்பிளிக்ஸ் இந்தியா மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பூஜா தனது மனுவில், "அந்தப் படத்தைப் பார்த்தபோது, தயாரிப்பாளர்கள் எனது புத்தகத்தின் தலைப்பைத் தவறாகப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், படத்தின் இரண்டாம் பாதியில் எனது நாவலின் கணிசமான பகுதிகளை அப்பட்டமாகப் பிரதி எடுத்திருப்பதையும் கண்டுபிடித்தேன். இதில் அதன் காட்சிகள், உரையாடல்கள், கதை அமைப்பு, நிகழ்வுகளின் வரிசை ஆகியவை அடங்கும்" என்று கூறியுள்ளார்.
தர்மா நிறுவனம் தனது புத்தகத்தின் அதே தலைப்பைப் பயன்படுத்தியதன் மூலம் 'அப்பட்டமான ஏமாற்றுச் செயலைச் செய்துள்ளது', இது 'தற்செயலாக இருக்க முடியாது' என்றும் அவர் தெரிவித்தார்.
ஹோம்பவுண்ட் படத்தின் திரைக்கதை 2022-ல் உருவாக்கப்பட்டது. இது அவரது நாவல் வெளியிடப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு என்பது குறிப்பிடத்தக்கது.
- முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
- ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்த இயக்க தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டு கொல்லப் பட்டார்.
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சி மாணவர்கள் போராட்டத்தால் கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதற்கிடையே வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்த இயக்க தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டு கொல்லப் பட்டார். இதனால் அங்கு வன்முறை வெடித்தது.
இந்தநிலையில் வங்காளதேச இடைக்கால அரசாங்கம் மீதும், அரசியல் தலைவர்கள் மீதும் ஷெரீப் உஸ்மான் ஹாடியின் சகோதரர் உமர் ஹாடி குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எனது சகோதரர் கொலைக்கு அதிகாரத்தில் இருப்பவர்களே காரணம். அவரை கொன்றுவிட்டு அதை காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்ய விரும்புகிறீர்கள். பொதுத் தேர்தலை சீர்குலைப்பதற்காகவே அதிகாரத்தில் இருப்பவர்களால் இந்தக் கொலை நடத்தப்பட்டது.
தேர்தல் சூழல் பாதிக்கப்படாமல் இருக்க, கொலையாளிகள் மீது விரைவாக விசாரணை நடத்தப்படு வதை உறுதி செய்யுங்கள். ஆனால் அரசாங்கம் எந்த வெளிப்படையான முன்னேற்றத்தையும் செய்யவில்லை. ஷெரீப் உஸ்மான் ஹாடிக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், ஒரு நாள் நீங்களும் வங்காளதேசத்தில் இருந்து தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இதன் என்ட்ரி லெவல் வேரியண்டில் எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
- இந்த புதிய வேரியண்ட், என்ட்ரி வேரியண்டுக்கு அடுத்ததாக இருக்கும்.
கே.டி.எம். நிறுவனம் 160 டியூக் மோட்டார்சைக்கிளின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய அம்சமாக இதில் 5 இன்ச் டி.எப்.டி. டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. டியூக் 390 மாடலில் அறிமுகம் செய்யப்பட்ட துல்லியமான டி.எப்.டி. டிஸ்பிளே தான் இதிலும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதி உள்ளது. கே.டி.எம். ஆப்ஸ் மூலம் இணைத்து மியூசிக், போன் அழைப்புகளை ஏற்பது, நேவிகேஷன் வசதி போன்றவற்றை பெறலாம்.
இதன் என்ட்ரி லெவல் வேரியண்டில் எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய வேரியண்ட், என்ட்ரி வேரியண்டுக்கு அடுத்ததாக இருக்கும். இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.1.79 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது என்ட்ரி லெவல் வேரியண்டை விட சுமார் ரூ.8000 அதிகம் ஆகும்.
சினிமாவில் 13 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நடிகர் விக்ரம் பிரபுவிடம் நேர்காணல் நடந்தது. இதில், விக்ரம் பிரபுவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவரது பதிலும்..
*சினிமாவில் 13 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளீர்கள். இந்த பயணத்தை இப்போது திரும்பிப் பார்க்கும்போது என்ன உணர்கிறீர்கள்?
உண்மையிலேயே ஒரு நல்ல உணர்வு. 13 ஆண்டுகள் என்பது நீண்ட காலம். ஆனால் திரும்பிப் பார்க்கும்போது அது எப்படி போய்விட்டது என்றே தெரியவில்லை. இந்தப் பயணம் எனக்கு வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம்—எல்லாவற்றையும் காட்டியுள்ளது. அதைவிட முக்கியமாக, மனிதர்களை புரிந்துகொள்ளவும், வாழ்க்கையை புரிந்துகொள்ளவும் கற்றுக் கொடுத்துள்ளது.
*ஆரம்பத்தில் சினிமா குறித்து உங்கள் கனவுகள் என்ன?
ஆரம்பத்தில் எல்லோருக்கும் இருப்பது போல எனக்கும் ஒரு கனவு இருந்தது. சினிமா என்றால் இது தான், இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற ஒரு கற்பனை. ஆனால் களத்தில் இறங்கிய பிறகு தான் புரிந்தது, சினிமா என்பது கனவு மட்டும் அல்ல, அது ஒரு பெரிய அமைப்பு, ஒரு தொழில், ஒரு குழு வேலை.
*25-வது படம், மைல்ஸ்டோன்ஸ், இவைகளுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம்?
எனக்கு எண்கள் முக்கியமல்ல. அந்த காலகட்டத்தில் நான் என்ன கற்றுக்கொண்டேன், என்ன மாற்றம் அடைந்தேன் என்பதே முக்கியம். Milestones என்பது ஒரு நினைவுக் குறிப்பு மட்டும்.
*சிறை படம் உங்களை ஈர்த்த காரணம்?
கதை தான். அது மிகவும் நேர்மையாக இருந்தது. போலீஸ் அமைப்பு, சமூகத்தின் பார்வை, மனித உணர்வுகள்—எல்லாம் மிக நுட்பமாக சொல்லப்பட்டிருந்தது.
*சிறை ஒரு controversial படம் தானா?
இது controversial படம் அல்ல. ஆனால் இது கேள்விகள் கேட்கும் படம். ஒவ்வொருவரும் இதில் இருந்து தங்களுக்கு ஏற்ற ஒரு விஷயத்தை எடுத்துச் செல்ல முடியும்.
*போலீஸ் கதாபாத்திரத்துக்காக தயாரானது எப்படி?
அது ஒரு பெரிய அனுபவம். உடல் மாற்றம் மட்டுமல்ல, மனநிலையும் மாற வேண்டும். Body language, discipline, mentality—இவை எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அது வாழ்க்கையிலும் பயன்படும் பாடங்கள்.
- இந்த நிறுவனம் சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட ஹெக்டர் பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்தது.
- இதன் டீசல் மற்றும் 6 சீட் வேரியண்ட் விலை அடுத்த மாதம் வெளியிடப்படும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம், அடுத்த மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்த உள்ளது. இது குறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுவாக அனைத்து மாடல்களின் விலையும் சுமார் 2 சதவீதம் அதிகரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலதன பொருட்கள் விலை உயர்வு மற்றும் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் தான் இதற்கு காரணம் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றான விண்ட்சர் இ.வி. எலெக்ட்ரிக் காரின் ஷோரூம் விலை ரூ.14.27 லட்சம் முதல் ரூ.18.76 லட்சம் வரை உள்ளது. இது சுமார் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.37 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம்.
இதுபோல் இந்த நிறுவனத்தின் என்ட்ரி லெவல் மாடலான Comet EV ஷோரூம் விலை சுமார் ரூ.7.64 லட்சம் முதல் ரூ.10.19 லட்சம் வரை உள்ளது. இதன் விலை சுமார் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிறுவனம் சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட ஹெக்டர் பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.11.99 லட்சம் முதல் ரூ.18.99 லட்சம் வரை உள்ளது. இதுபோல் 7 சீட்டர் ஹெக்டர் பிளஸ் விலை சுமார் ரூ.17.29 லட்சம் முதல் ரூ.19.49 லட்சம் வரை உள்ளது. இதன் டீசல் மற்றும் 6 சீட் வேரியண்ட் விலை அடுத்த மாதம் வெளியிடப்படும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ், பி.ஒய்.டி. ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் விலையை உயர்த்தின. இதை தொடர்ந்து எம்.ஜி. மோட்டார் நிறுவனமும் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ராஜ் தாக்கரே 2006-ஆம் ஆண்டு மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா கட்சியை தொடங்கினார்
- உத்தவ் மற்றும் ராஜும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றாக கைகோர்த்தனர்.
சிவசேனா கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா (எம்என்எஸ்) என்ற கட்சியை தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் உத்தவ் மற்றும் ராஜும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மராத்தி மொழிக்காக ஒன்றாக கைகோர்த்தனர்.
தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு பேரணி நடத்தியது.
இந்நிலையில், வரவிருக்கும் நகராட்சித் தேர்தல்களுக்காக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா காட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
கூட்டணி முடிவை அறிவித்த பிறகு தாக்கரே சகோதரர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
உத்தவ்-ராஜ் கூட்டணி இந்தியா கூட்டணிக்கும் வலுவானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளும் மும்பை, தானே, கொங்கன் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் பலமாக உள்ளன.
- சிரிப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள்.
- சிரிப்பு சிறிது நேரம் நம் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது.
தினமும் சிறிது நேரம் சத்தமாக சிரிப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். சிரிப்பு உடனடியாக மன நிலையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
சத்தமாக சிரிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆயுட்காலத்தை அதிகரிக்கும் ஒரு எளிய பயிற்சியாகும். சத்தமாக சிரிப்பது நீண்ட ஆயுளுக்கு பெரிதும் உதவும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
சிரிப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள். மகிழ்ச்சி ஆயுட்காலத்தை அதிகரிப்பதோடு இணைக்கப்பட்டுள்ளது.

நேர்மறையான, மகிழ்ச்சியான மன நிலையைப் பராமரிப்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு முக்கிய பகுதியாகும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். சிரிப்பு சிறிது நேரம் நம் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது.
பின்னர் தசைகள் தளர்ந்து, இரத்த அழுத்தம் குறைகிறது. உடல் முழுவதும் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. சத்தமாக சிரிப்பது உதரவிதானம் மற்றும் நுரையீரலை செயல்படுத்துகிறது. இது ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது. இதன் விளைவாக, மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைகிறது. மனம் அமைதியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். கலகலவென கண்ணில் நீர்வர சிரிப்போம்.
- இது ஒரு வலிமையான எஃகு கோட்டை. எந்த கொம்பனாலும் துரும்பை கூட அசைத்துப் பார்க்க முடியாது.
- அதே நேரத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் கெடுபிடிகள் வந்திருக்கிறது.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
எம்.ஜி.ஆர். ஒரு மாபெரும் தலைவர் என்றும் அவரது புகழ் ஒருபோதும் குறையவே குறையாது.
ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோரை கூட்டணியில் இணைப்பது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வார்.
எடப்பாடி பழனிசாமியுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது அவர்களுடைய கருத்தாகும். எங்கள் கருத்தை பொறுத்தவரை பொதுச்செயலாளர் உரிய நேரத்தில் சொல்வார் என்றார்.
குரங்கு கையில் இருக்கும் பூமாலை போல அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி பிய்த்து போட்டுக் கொண்டிருக்கிறார் என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்த கருத்து பற்றி ஜெயக்குமார் கூறும்போது, அவர் சொல்வார்
இது (அ.தி.மு.க.) பூமாலை கிடையாது, இது கட்டி முடிக்கப்பட்ட கோபுரம். உதிர்ந்த செங்கற்கள் பற்றி பேச முடியாது. செங்கற்கள் என்பது வேறு. கட்டி முடிக்கப்பட்ட கோபுரம் என்பது வேறு. இது ஒரு வலிமையான எஃகு கோட்டை. எந்த கொம்பனாலும் துரும்பை கூட அசைத்துப் பார்க்க முடியாது.
100 நாள் வேலை திட்டத்திற்கு பெயர் மாற்றம் உள்ளிட்ட காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
மகாத்மா காந்தியின் பெயரை மாற்றக்கூடாது என்பதை தெளிவுபடுத்தி விட்டோம், எங்கள் பொது செயலாளர் சொல்லி விட்டார். அதே நேரத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் கெடுபிடிகள் வந்திருக்கிறது. ஏழை மக்களுக்கு அது சிரமம் அதை மத்திய அரசாங்கம் மீண்டும் பரிசீலனை செய்து, முன்பு இருந்தது போல ஆக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு இல்லாத ஏழை எளிய மக்களுக்காகவே அந்த திட்டம் இருக்கிறது. அதை முழுமையாக சிதைக்காமல் உள்ளதை உள்ளபடி இருக்க வேண்டும் என்றார்.
- ஒவ்வொரு ஆண்டும் 85 ஆயிரம் எச்-1பி விசா வழங்கப்படுகிறது.
- கம்ப்யூட்டர் அடிப்படையிலான குலுக்கல் முறையில் விசா ஒதுக்கப்படும்.
அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவை இந்தியர்கள் அதிகளவில் பெற்று பணியாற்றி வருகிறார்கள்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், குடியேற்றம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த நிலையில் எச்-1பி விசாவுக்கு கட்டுப்பாடுகளை விதித்தார். எச்1-பி விசா விண்ணப்பங்களுக்கு 1 லட்சம் டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.89 லட்சம்) கட்டணமாக வசூ லிக்கப்படும் என்று டிரம்ப் நிா்வாகம் அறிவித்தது.
மேலும் விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகக் கணக்குகளை ஆய்வு செய்வது போன்ற தீவிர கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தநிலையில் எச்-1பி விசா நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த குலுக்கல் முறை ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 85 ஆயிரம் எச்-1பி விசா வழங்கப்படுகிறது.
அந்த எண்ணிக்கையை தாண்டி அதிக விண்ணப்பம் வரும்போது குலுக்கல் முறை கடைபிடிக்கப்படும். கம்ப்யூட்டர் அடிப்படையிலான குலுக்கல் முறையில் விசா ஒதுக்கப்படும்.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் குலுக்கல் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதிக சம்பளம் மற்றும் மிகச்சிறந்த பணித்திறன் உள்ள விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை கூறியதாவது:-
எச்-1பி குலுக்கல் முறை ரத்து அடுத்த ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி முதல் அமலுக்கு வரும். தற்போதைய குலுக்கல் முறையில் பல முறைகேடுகள் நடக்கின்றன. பல நிறுவனங்கள் தகுதியற்ற வா்களைக் குறைந்த சம்பளத்தில் பணியமா்த்த இந்த முறையைத் தவறாகப் பயன்படுத்துகின்றன.
புதிய முறையினால் போட்டித்தன்மை அதிகரிப்பதோடு, திறமையானவா்களுக்கு மட்டுமே விசா கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தது. மேலும் , இதுதொடா்பாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கூறும் போது, அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த ஊதியத்துக்கு வெளிநாட்டுப் பணியாளா்களைப் பணியமா்த்துவதன்மூலம், அமெரிக்கக் குடிமக்களின் வேலை வாய்ப்பும், ஊதிய உயா்வும் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி.
- எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,
சமூக நீதியின் முன்னோடி,
சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி, எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரின் திருவுருவப் படத்திற்கு எமது அலுவலகத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன்.
தந்தை பெரியார் அவர்கள் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.











