என் மலர்
உலகம்

வங்கதேச வன்முறை: கவலை தெரிவித்த ஐ.நா.பொதுச்செயலாளர்
- டெல்லியில் உள்ள வங்கதேசத் தூதரகம் முன் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
- வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறை குறித்து மிகவும் கவலை அடைந்துள்ளோம் என்றார்.
நியூயார்க்:
வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும், தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கொல்லப்பட்டதையும் கண்டித்து, டெல்லியில் உள்ள வங்கதேசத் தூதரகம் முன் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, தவிர்க்க முடியாத காரணங்களால் விசா மற்றும் தூதரகச் சேவைகளை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் செய்தித்தொடர்பாளர் ஸ்டெபானி டுஜார்ரிக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது நிருபர்கள் வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொலை உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:
வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறை குறித்து மிகவும் கவலை அடைந்துள்ளோம்.
வங்கதேசமோ, வேறு நாடோ பெரும்பான்மையை சேராதவர்கள் தங்களைப் பாதுகாப்பாக உணர வேண்டும்.
ஒவ்வொரு வங்கதேசத்தவரும் தங்களைப் பாதுகாப்பாக உணர தேவையான நடவடிக்கைகளை வங்கதேச அரசு எடுக்கும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.






