என் மலர்
நீங்கள் தேடியது "UN chief Guterres"
- டெல்லியில் உள்ள வங்கதேசத் தூதரகம் முன் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
- வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறை குறித்து மிகவும் கவலை அடைந்துள்ளோம் என்றார்.
நியூயார்க்:
வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும், தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கொல்லப்பட்டதையும் கண்டித்து, டெல்லியில் உள்ள வங்கதேசத் தூதரகம் முன் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, தவிர்க்க முடியாத காரணங்களால் விசா மற்றும் தூதரகச் சேவைகளை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் செய்தித்தொடர்பாளர் ஸ்டெபானி டுஜார்ரிக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது நிருபர்கள் வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொலை உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:
வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறை குறித்து மிகவும் கவலை அடைந்துள்ளோம்.
வங்கதேசமோ, வேறு நாடோ பெரும்பான்மையை சேராதவர்கள் தங்களைப் பாதுகாப்பாக உணர வேண்டும்.
ஒவ்வொரு வங்கதேசத்தவரும் தங்களைப் பாதுகாப்பாக உணர தேவையான நடவடிக்கைகளை வங்கதேச அரசு எடுக்கும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய பொற்கோயில் அமைந்துள்ள அமிர்தசரஸ் நகரின் அருகேயுள்ள சவுரா பஜார் பகுதியில் நேற்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.
இவ்விழாவின் இறுதிக்கட்டமாக ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டது. பல அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ராவணன் கொடும்பாவி கொளுந்துவிட்டு எரியும் காட்சியை மூடப்பட்டிருந்த 27-ம் எண் ரெயில்வே கேட்டின் தண்டவாளத்தின் அருகே நின்றவாறு பலர் தங்களது கைபேசிகளில் பதிவு செய்தனர்.
அப்போது, அந்த தண்டவாளத்தின் வழியாக இரு ரெயில்கள் எதிர் எதிர் திசையில் வந்தன. உற்சாக மிகுதியில் இருந்த மக்கள் சுதாரித்து கொள்வதற்குள் ஜலந்தர் நகரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற ரெயில் மக்கள் கூட்டத்தின்மீது மோதியது.

இதுதொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் அன்ட்டோனியோ குட்டரெஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த மாதத்தின் துவக்கத்தின் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயிலை காண்பதற்கான கவுரவம் எனக்கு அளிக்கப்பட்டது. அங்குள்ள மக்கள் என்னை அன்பாகவும், கனிவாகவும் வரவேற்றனர்.
இந்த கோர ரெயில் விபத்தால் வேதனைக்குள்ளாகி இருக்கும் பஞ்சாப் மக்களுடன் இப்போது எனது நினைவுகளும் இணைந்துள்ளது. இவ்விபத்தில் தங்களுக்கு பிரியமானவர்களை இழந்த அனைவருக்கும் எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் கனடா பிரதமர் ஜஸ்ட்டின் டுருடேயு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘இந்த விபத்தால் மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கும் இந்தியர்களுடன் கனடா மக்களின் சோகமும் இணைந்துள்ளது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய பிராத்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். #Amritsartrainaccident #UNchiefGuterrescondole #CanadianPMTrudeaucondole






