search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Periyar Memorial Day"

    • தந்தை பெரியாரை இளைஞர்கள் அதிகளவில் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர்.
    • தமிழக தென்மாவட்டங்களில் மத்திய நிதியமைச்சர் ஆய்வு செய்யப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    மதுரை:

    பெரியாரின் 50-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மதுரை சின்ன சொக்கிக்குளம் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமூகநீதியின் வடிவமாக தந்தை பெரியார் திகழ்கிறார். தந்தை பெரியாரை இளைஞர்கள் அதிகளவில் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர். சமீப காலமாக தந்தை பெரியார் சிலை அவமதிப்பு அதிகளவில் நடைபெறுவது வேதனைக்குரியது.

    தந்தை பெரியார் சிலையை திட்டமிட்டு ஒரு கூட்டம் அவமதிப்பு செய்கிறது. அதற்கு தகுந்த பதிலடியை நாங்கள் கொடுத்துள்ளோம். வெளிப்படையாக பெரியார் சிலையை அவமதிப்பு செய்வோம் என கூறி விட்டு யாராவது ஒருவர் அவமதிப்பு செய்தால் அவர்கள் கை இருக்காது.

    தமிழக தென்மாவட்டங்களில் மத்திய நிதியமைச்சர் ஆய்வு செய்யப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய அமைச்சர்கள் தென்மாவட்ட வெள்ள பாதிப்பை பார்வையிடவில்லை என உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்ததை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்ய வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரியார் சிலைக்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • கி.வீரமணி தலைமையில் அமைதிப் பேரணியாக வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு வந்தனர்.

    சென்னை:

    தந்தை பெரியாரின் 50-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இதையொட்டி அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், மேயர் பிரியா, மாவட்ட கழக செயலாளர் நே.சிற்றரசு, எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, மயிலை வேலு, மாதவரம் சுதர்சனம், பரந்தாமன், எபிநேசர், பகுதி செயலாளர் மதன்மோகன், புழல் நாராயணன், சேப்பாக்கம் பகுதி பொருளாளர் வி.பி.சிதம்பரம், பாண்டி பஜார் பாபா சுரேஷ் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.

    திராவிடர் கழகம் சார்பில் சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அவருடன் கட்சியின் துணைத்தலைவர் கலி பூங்குன்றன், பொதுச் செயலாளர் அன்புராஜ், பொருளாளர் குமரேசன், வழக்கறிஞர் அருள்மொழி பேராசிரியர் சுப வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு வந்து மாலை அணிவித்து வணங்கினார்கள்.

    பின்னர் கி.வீரமணி தலைமையில் அங்கிருந்து அமைதிப் பேரணியாக வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு வந்தனர். அங்கு பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அங்கு பெரியார் நினைவுநாள் கருத்தரங்கம், புத்தகம் வெளியீட்டு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திரளாக வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் வேப்பேரியில் உள்ள ராஜீவ்காந்தி சிலை அருகில் இருந்து பெரியார் திடலுக்கு ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்நிகழ்வில் மாநில செயலாளர் விஜயசேகர் சர்க்கிள் தலைவர்கள் எம்.டி.சூர்யா, சி.பி.நரேஷ்குமார், நிலவன், உமாயிலன், ஆர்.டி.குமார், சிவாலயா ஜாபர், மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தைலாபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் மாநில மாவட்ட நிர்வாகிகள் உடன் சென்று மரியாதை செலுத்தினார்கள்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் பெரியார் படத்துக்கும், எம்.ஜி.ஆர். படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. அழகாபுரம், மோகன்ராஜ், துணைச் செயலாளர்கள் எல்.கே.சதீஷ், பார்த்தசாரதி, உயர்மட்டகுழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் பங்கேற்றனர்.

    • திராவிட கழகம், தி.மு.க.வினர் பங்கேற்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தத்தில் பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு திராவிட கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    திராவிட கழக தலைமை கழக பேச்சாளர் இரா. பெரியார்செல்வன், திராவிடர் கழக வேலூர் மண்டல தலைவர் வி. சடகோபன், மாவட்ட தலைவர் இரா.அன்பரசன், மண்டல மகளிர் அணி செயலாளர் ச.ஈஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் வி.இ.சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் குடியாத்தம் நகர மன்ற தலைவரும், நகர செயலாளருமான எஸ்.சவுந்தரராசன், ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வக்கீல் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் கே.கண்ணன் நகர் மன்ற உறுப்பினர்கள் ம.மனோஜ், நவீன்சங்கர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் சிவ. செல்லபாண்டியன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கு.விவேக், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட சமூக நல்லிணக்க பேரவை அமைப்பாளர் குருவிகணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×