பெரியாரின் நினைவைப் போற்றுவோம்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

'எதையும் அப்படியே நம்பாதே, ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேள்' என்னும் பகுத்தறியும் பண்பை ஊட்டிய தந்தை பெரியாரின் நினைவு நாள் இன்று!சமூகநீதி, மதசார்பின்மை காக்க - மூடநம்பிக்கை ஒழிய அய்யா காட்டிய வழியில் அயராது உழைக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.
பெரியாரின் நினைவைப் போற்றுவோம்!  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை :

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51-வது ஆண்டு நினைவு நாளையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

'எதையும் அப்படியே நம்பாதே, ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேள்' என்னும் பகுத்தறியும் பண்பை ஊட்டிய தந்தை பெரியாரின் நினைவு நாள் இன்று!

'மானமும் அறிவும் தான் மனிதருக்கு அழகு' என்பதை மானுடத்துக்கு உணர்த்த தனது இறுதி மூச்சு வரை தளராமல் உழைத்த தந்தை பெரியார் தனது சுற்றுப்பயணத்தை நிறுத்திக் கொண்ட நாள்!

சமூகநீதி, மதசார்பின்மை காக்க - மூடநம்பிக்கை ஒழிய அய்யா காட்டிய வழியில் அயராது உழைக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.

பெரியாரின் நினைவைப் போற்றுவோம்! என்று கூறியுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com