search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியார் சிலைக்கு மாலை
    X

    பெரியார் சிலைக்கு மாலை

    • திராவிட கழகம், தி.மு.க.வினர் பங்கேற்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தத்தில் பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு திராவிட கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    திராவிட கழக தலைமை கழக பேச்சாளர் இரா. பெரியார்செல்வன், திராவிடர் கழக வேலூர் மண்டல தலைவர் வி. சடகோபன், மாவட்ட தலைவர் இரா.அன்பரசன், மண்டல மகளிர் அணி செயலாளர் ச.ஈஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் வி.இ.சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் குடியாத்தம் நகர மன்ற தலைவரும், நகர செயலாளருமான எஸ்.சவுந்தரராசன், ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வக்கீல் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் கே.கண்ணன் நகர் மன்ற உறுப்பினர்கள் ம.மனோஜ், நவீன்சங்கர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் சிவ. செல்லபாண்டியன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கு.விவேக், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட சமூக நல்லிணக்க பேரவை அமைப்பாளர் குருவிகணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×