search icon
என் மலர்tooltip icon

    தாய்லாந்து

    • தாய்லாந்தில் லாரிமீது சரக்கு ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
    • இந்தக் கோர விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டின் சஷொன்சொ மாகாணம் முவாங் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் தொழிலாளர்கள் பலர் பயணித்தனர்.

    அந்த லாரி ரெயில்வே தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டபோது, வேகமாக வந்த சரக்கு ரெயில் லாரிமீது மோதியது. இந்தக் கோர விபத்தில் 3 பெண்கள், 5 ஆண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்டீல் வெல்டிங் செயல்பாட்டின்போது ஏற்பட்ட தொழில்நுட்பப் பிழையே காரணம்.
    • குண்டுவெடிப்பின் எதிரொலியால் ஏராளமான கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதம்.

    தாய்லாந்தில் தெற்கு மாகாணமான நாராதிவாட்டில் உள்ள சுங்கை கோலோக் நகரில் அமைந்துள்ள பட்டாசுக் கிடங்கில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    அங்குள்ள கட்டிடத்தின் கட்டுமான பணியின்போது வெல்டிங் செய்ததால் ஏற்பட்ட பிழை காரணமாக பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நாராதிவாட் கவர்னர் சனன் பொங்கக்சோர்ன் கூறுகையில், "சுங்கை கோலோக்கில் பட்டாசுகளை சேமித்து வைத்திருந்த கிடங்கில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. சமீபத்திய எண்ணிக்கையின்படி ஒன்பது பேர் இறந்துள்ளனர். 115 பேர் காயமடைந்துள்ளனர்.

    தற்போது தீ கட்டுக்குள் உள்ளது. கட்டிடம் கட்டப்பட்டு வருவதால், ஸ்டீல் வெல்டிங் செயல்பாட்டின்போது ஏற்பட்ட தொழில்நுட்பப் பிழையே காரணம் என்று முதற்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது" என்றார்.

    இதுதொடர்பாக அந்நாட்டின் ஊடகங்களில் வெளியான காட்சிகளில், காற்றில் பெரும் புகை மூட்டம் எழுவதையும், குண்டுவெடிப்பின் எதிரொலியால் ஏராளமான கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் மோசமாக சேதமடைந்ததையும் காட்டியது.

    • ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது.
    • ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 6 தங்கம் வென்றது.

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த 12ம் தேதி 24வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது.

    ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஹெப்டத்லான், கலப்பு தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    இந்தியா சார்பில் கலந்துக் கொண்ட வீரர்களில், தொடக்க நாளில் அபிஷேக் பால் இந்தியாவின் பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்தார்.

    இரண்டாம் நாளில் நடைபெற்ற போட்டிகளில் மூன்று இந்தியர்கள் தங்கம் வென்றனர்.

    மூன்றாம் நாளான நேற்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியர்கள் இரண்டு தங்கம் வென்று அசத்தினர். இதில், ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர்பால் சிங் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

    மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பரூல் சவுதாரி தங்கம் வென்று அசத்தினார்.

    4ம் நாளான நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்றார்.

    தொடர்ந்து இந்தியாவுக்கு மேலும் இரண்டு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.

    அதன்படி, உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சர்வேஷ் 2.26 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    மேலும், ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் ஸ்ரீசங்கர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    இதேபோல், பல்வேறு போட்டிகளிலும் இந்தியா சார்பில் விளையாடிய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்தனர்.

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்றுடன் நிறைவடைந்த நிலையில், 27 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.

    6 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் இந்திய அணி அசத்தலாக வெற்றிப் பெற்றுள்ளது.

    • தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்றார்.
    • இந்தியா இதுவரை 12 பதக்கங்களை வென்றுள்ளது.

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

    தொடக்க நாளில் அபிஷேக் பால் இந்தியாவின் பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்தார்.

    இரண்டாம் நாளில் நடைபெற்ற போட்டிகளில் மூன்று இந்தியர்கள் தங்கம் வென்றனர்.

    மூன்றாம் நாளான நேற்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியர்கள் இரண்டு தங்கம் வென்று அசத்தினர். இதில், ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர்பால் சிங் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

    மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பரூல் சவுதாரி தங்கம் வென்று அசத்தினார்.

    இந்நிலையில், 4ம் நாளான இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்றார்.

    தொடர்ந்து இந்தியாவுக்கு மேலும் இரண்டு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.

    அதன்படி, உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சர்வேஷ் 2.26 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    மேலும், ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் ஸ்ரீசங்கர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    இதன்மூலம், இந்தியா இதுவரை 12 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நீளம் தாண்டுதலில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
    • இந்தியா இதுவரை 9 பதக்கங்களை வென்றுள்ளது.

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க நாளில் அபிஷேக் பால் இந்தியாவின் பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்தார். அவர் 10000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இரண்டாம் நாளான நேற்று நடைபெற்ற போட்டிகளில் மூன்று இந்தியர்கள் தங்கம் வென்று சாதனை படைத்தனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியர்கள் இரண்டு தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.

    இதில், ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர்பால் சிங் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பரூல் சவுதாரி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

    இதேபோல், நீளம் தாண்டுதலில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை ஷைலி சிங் வெள்ளி வென்றார்.

    இதன்மூலம், ஐந்து தங்கம், ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் என இந்தியா இதுவரை 9 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் ஜோதி யர்ராஜி தங்கம் வென்றார்.
    • ஆடவருக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் அப்துல்லா அபூபக்கர் தங்கம் வென்றார்.

    பாங்காக்:

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க நாளில் அபிஷேக் பால் இந்தியாவின் பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்தார். அவர் 10000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற போட்டிகளில் மூன்று இந்தியர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் ஜோதி யர்ராஜி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 23 வயதான யர்ராஜி 13.09 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து சாதனை படைத்தார்.

    ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் அஜய் குமார் சரோஜ் தங்கம் வென்றார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அப்துல்லா அபூபக்கர், ஆடவருக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்றார்.

    • முதல் செட்டை இந்திய வீரர் லக்சயா சென் கைப்பற்றினார்.
    • அடுத்த 2 செட்களையும் தாய்லாந்து வீரர் வென்றார்.

    பாங்காக்:

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், தாய்லாந்து வீரருடன் மோதினார்.

    இதில் இந்திய வீரர் லக்சயா சென் முதல் செட்டை வென்றார். சுதாரித்துக் கொண்ட தாய்லாந்து வீரர் அடுத்த இரு செட்களை 21-17, 21-13 என்ற கணக்கில் வென்றார்.

    இந்த தோல்வியின் மூலம் தாய்லாந்து ஓபன் தொடரில் இருந்து இந்திய வீரர் லக்சயா சென் வெளியேறினார்.

    • ராணுவ ஆட்சி மற்றும் மன்னர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
    • தாய்லாந்தில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 14-ந் தேதி தேர்தல் நடந்து முடிந்தது.

    பாங்காங்:

    தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ராணுவம் கலைத்தது.

    அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி பிரயுத்சான் ஈசா பிரதமராக இருந்து வந்தார். இதற்கிடையே ராணுவ ஆட்சி மற்றும் மன்னர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

    இதை தொடர்ந்து தாய்லாந்தில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 14-ந் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ராணுவ ஆதரவு பெற்ற கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பார்வர்டு கட்சி, பியூ தாய் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பலப்பரீட்சை நடந்தன. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் எதிர்க்கட்சிகள் அபார வெற்றி பெற்றன. ராணுவ ஆதரவு பெற்ற கட்சிகள் படுதோல்வியை சந்தித்தன.

    நேற்று அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் 500 இடங்களை கொண்ட பிரதிநிதி சபையில் மூவ் பார்வர்ட் கட்சி 151 இடங்களை கைப்பற்றியது பியூ தாய் கட்சி 141 இடங்களை தன் வசப்படுத்தியது.

    ராணுவத்தின் ஆதரவு பெற்ற ஆளும் கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகள் வெறும் 15 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றன. பிரதமர் பிரயுத் சான் ஒக்சாவின் கட்சி 36 இடங்களை கைப்பற்றியது.

    தேர்தல் முடிவுகளை அடுத்து தாய்லாந்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு ராணுவம் ஆட்சி முடிவுக்கு வரப்பட்டு ஜனநாயக முறையிலான ஆட்சி அமையவுள்ளது.

    பார்வர்டு கட்சி மேலும் சில கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் என்றும் பிடா லிம்ஜாரோ என்ரட்டா பிரதமராக பதவி ஏற்பார் என்றும் கூறப்படுகிறது.

    அடுத்த பிரதமர் யார் என்பதற்காக வாக்கெடுப்பு வருகிற ஜூலை மாதம் நடக்கிறது. இதில் செனட் சபையில் உள்ள 750 இடங்களில் 376 இடங்களை கைப்பற்ற வேண்டும். சென்ட் சபையில் ராணுவத்தால் நியமிக்கப்பட்ட 250 உறுப்பினர்களும் அடங்குவர்.

    இது தொடர்பாக பார்வர்ட் கட்சி தலைவர் பீடா லிம்ஜாரோ என்ரட்டா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, 'நாட்டின் 30-வது பிரதமராக மாற்றத்தை கொண்டுவர தயாராக இருக்கிறேன். நீங்கள் என்னுடன் உடன்பட்டாலும் உடன்படாவிட்டாலும் நான் உங்கள் பிரதமராக இருப்பேன். நீங்கள் எனக்கு வாக்களித்தாலும் இல்லாவிட்டாலும் உங்களுக்கு சேவை செய்வேன் என்றார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சிரிபோர்ன் என்ற தோழியுடன் கான் வோங்க் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
    • சிரிபோர்ன் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பாங்காக்:

    தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரை சேர்ந்தவர் சரத்சிங் சிவுதாபார்ன் (வயது 32). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சிரிபோர்ன் என்ற தோழியுடன் கான் வோங்க் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அப்போது சிரிபோர்ன் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் சாப்பிட்ட உணவில் சயனைடு கலந்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சரத்சிங் சிவுதாபார்னிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் தோழி சிரிபோர்னை சயனைடு கொடுத்து கொன்றது அம்பலமானது. மேலும் 11 நண்பர்களையும் இதே பாணியில் தீர்த்து கட்டியது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் சரத்சிங் சிவுதாபார்னை கைது செய்தனர். அவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.

    நகை- பணத்துக்கு ஆசைப்பட்டு அவர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு உள்ளார். தனது அழகை பயன்படுத்தி 12 ஆண் நண்பர்களை தனது வலையில் விழ வைத்தார். பின்னர் அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து கொண்டு உணவில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்தார். அடுத்தடுத்து அவர் கொலையை அரங்கேற்றி உள்ளார். போலீஸ் நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் அனைத்தும் வெளியானது.

    • பொதுமக்களை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் திடீரென்று சுட்டார்.
    • தாக்குதல் சம்பவம் முன்னாள் கிராம தலைவர் வீடு அருகே நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

    பாங்காங்:

    தாய்லாந்தில் தெற்கில் உள்ள சூரத் தானி மாகாணம் கிரி ராட் நிகோம் பகுதியில் துப்பாக்கி சூடு நடந்தது. பொதுமக்களை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் திடீரென்று சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தாக்குதல் நடத்திய நபர் தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாக்குதல் சம்பவம் முன்னாள் கிராம தலைவர் வீடு அருகே நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

    தாய்லாந்தில் சமீபகாலமாக வன்முறை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் நாங் புவாலாம் பு மாகாணத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரி நடத்திய தாக்குதலில் 24 குழந்தைகள் உள்பட 36 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தில் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது.

    • சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

    தாய்லாந்தின் பெட்சபுரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு கண்மூடித்தனமாக சுட்டார்.

    இதில் அங்கிருந்தவர்களின் பீதியில் அலறினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வீட்டை சுற்றி வளைத்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

    போலீசார் மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் போலீசார் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டு பதிலடி கொடுத்தனர்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

    • பள்ளிகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் இருந்த குழந்தைகளை போலீசார் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
    • அந்த நபர் போதைப்பொருள் வழக்கின் விசாரணைக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்ததாக தகவல்

    பாங்காக்:

    தாய்லாந்தின் பெட்சாபுரி நகரில் இன்று வாலிபர் ஒருவர் திடீரென தனது வீட்டின் அருகே சென்றவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளான். இதை சற்றும் எதிர்பாராத மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து, துப்பாக்கி சூடு நடத்தியவரின் வீட்டை சுற்றி வளைத்தனர். அந்த வாலிபர் வீட்டுக்குள் பதுங்கியிருந்தபடி துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம் ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் உள்ள குழந்தைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் இருந்த குழந்தைகளை போலீசார் பாதுகாப்பாக வெளியேற்றினர். அந்த வாலிபரை உயிருடன் பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில் அவன் பெயர் அனுவத் வீன்டாங் (வயது 29) என்பது தெரியவந்துள்ளது. திடீரென வன்முறையில் ஈடுபட்டதற்கான காரணம் தெரியவில்லை. போதைப்பொருள் வழக்கின் விசாரணைக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. 

    ×