search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "‘அபேஸ்’"

    • மகளுக்கு பணம் அனுப்ப சென்றவரை ஏமாற்றி பணத்தை அபகரித்த வாலிபர்
    • மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திவிர விசாரணை

    கோவை,

    கோவை சிறுமுகை அருகே உள்ள கோவிந்தனூரை சேர்ந்தவர் சிவசாமி (வயது 62). விவசாயி.

    சம்பவத்தன்று இவர் காரமடை ரோட்டில் உள்ள வங்கியில் ஏ.டி.எம். மையத்தில் ரூ.49,500 பணம் போடுவதற்காக சென்றார். அவருக்கு பணம் போட தெரியாததால் அருகில் நின்று கொண்டு இருந்த வாலிபர் ஒருவரிடம் விவசாயி சிவசாமி ரூ.49,500 பணத்தை கொடுத்து தனது மகளின் வங்கி கணக்கில் போடுமாறு கூறினார்.

    இதனையடுத்து அந்த வாலிபர் பணம் போடுவது போல நடித்து ரூ.48,500 பணத்தை போட்டாச்சு, ரூ.1000 மட்டும் திரும்பி வந்து விட்டதாக கூறி பணத்தை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றார்.

    வீட்டிற்கு சென்ற சிவசாமி தனது மகளை தொடர்பு கொண்டு பணம் வந்து விட்டதா என கேட்டார். அதற்கு அவர் வரவில்லை என்று கூறி விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த சிவசாமி வங்கிக்கு சென்று கேட்டார். அப்போது கணக்கை ஆய்வு செய்த அதிகாரிகள் பணம் செலுத்தப்படவில்லை என கூறினர்.

    உதவி செய்வது போல நடித்து வாலிபர் ஏமாற்றியதை உணர்ந்த விவசாயி இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். மையத்தில் பணம் போடுவது போல நடித்து விவசாயிடம் ரூ.48,500 பணத்தை ஏமாற்றி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

    • காலிங்கராயன்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் முத்தம்மாள். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
    • வீட்டு பீரோ திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முத்தம்மாள் பீரோவை பார்த்தபோது அதில் இருந்த நகை-பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பவானி:

    ஈரோடு காலிங்கராயன்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் முத்தம்மாள் (82). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று காலை ஓட்டலில் சாப்பாடு வாங்கி கொண்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து கீழே 100 ரூபாய் நோட்டுகள் விழுந்து விட்டதாக கூறி முத்தம்மாளிடம் கொடுத்துள்ளார்.

    பின்னர் அந்த பெண் முத்தம்மாளிடம் நான் உங்களுடன் வீட்டுக்கு வந்து உதவி செய்கிறேன் என்று கூறி வந்துள்ளார். பின்னர் வீட்டு வேலைகளை செய்வது போல் அந்த பெண் பாசாங்கு செய்தார். இதனையடுத்து நைசாக வீட்டு பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை, ரூ .60 ஆயிரம் ரொக்க பணத்தையும் திருடி சென்று விட்டார்.

    வீட்டு பீரோ திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முத்தம்மாள் பீரோவை பார்த்தபோது அதில் இருந்த நகை-பணம் திருடு போயிருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் வீட்டில் வேலைக்கு இருந்த பெண் மாயமானதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து முத்தம்மாள் சித்தோடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை தேடி வருகின்றனர். இந்த நூதன திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×