search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "headmistress's home"

    • காலிங்கராயன்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் முத்தம்மாள். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
    • வீட்டு பீரோ திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முத்தம்மாள் பீரோவை பார்த்தபோது அதில் இருந்த நகை-பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பவானி:

    ஈரோடு காலிங்கராயன்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் முத்தம்மாள் (82). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று காலை ஓட்டலில் சாப்பாடு வாங்கி கொண்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து கீழே 100 ரூபாய் நோட்டுகள் விழுந்து விட்டதாக கூறி முத்தம்மாளிடம் கொடுத்துள்ளார்.

    பின்னர் அந்த பெண் முத்தம்மாளிடம் நான் உங்களுடன் வீட்டுக்கு வந்து உதவி செய்கிறேன் என்று கூறி வந்துள்ளார். பின்னர் வீட்டு வேலைகளை செய்வது போல் அந்த பெண் பாசாங்கு செய்தார். இதனையடுத்து நைசாக வீட்டு பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை, ரூ .60 ஆயிரம் ரொக்க பணத்தையும் திருடி சென்று விட்டார்.

    வீட்டு பீரோ திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முத்தம்மாள் பீரோவை பார்த்தபோது அதில் இருந்த நகை-பணம் திருடு போயிருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் வீட்டில் வேலைக்கு இருந்த பெண் மாயமானதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து முத்தம்மாள் சித்தோடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை தேடி வருகின்றனர். இந்த நூதன திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×