search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ெரயில்வே கேட்"

    • சோழவந்தானில் ெரயில்வே கேட் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.
    • வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் ெரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது.

    இதனால் சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டி பகுதிகளுக்கு செல்வதற்காக ெரயில்வே கேட்டை தாண்டி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் சோழவந்தான் ெரயில்வே கேட் போதிய பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி பழுதடைந்து விடுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத் திற்கு உள்ளாகின்றனர்

    தண்டவாள பகுதியில் ஆட்டோ மற்றும் வாகனங்கள் வரும்போது ெரயில்வே கேட்டை திறக்க முடியாததால் எந்த நேரமும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    ஆகையால் ெரயில்வே துறை அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு ெரயில்வே கேட் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பண்ருட்டி-சென்னை சாலையில் ெரயில்வே கேட்டை மூட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    கடலூர்:

    பண்ருட்டியிலிருந்து சென்னை செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சாலையில் உள்ள ரயில்வே கேட் மற்றும் கேட் லாட்சை நிரந்தரமாக மூடரயில்வே நிர்வாகத்தினர் முடிவு செய்து உள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து இன்று காலை பராமரிப்பு பணியினால் தற்காலிகமாக ரயில்வே நிர்வாகத்தினர் ரயில்வே கேட்டை மூடினார். இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், பாதசாரதிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.

    இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் ரயில்வே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ×