search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ெரயில்வே கேட் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
    X

    சோழவந்தான் ரெயில்வே கேட்டை படத்தில் காணலாம்.

    ெரயில்வே கேட் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

    • சோழவந்தானில் ெரயில்வே கேட் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.
    • வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் ெரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது.

    இதனால் சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டி பகுதிகளுக்கு செல்வதற்காக ெரயில்வே கேட்டை தாண்டி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் சோழவந்தான் ெரயில்வே கேட் போதிய பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி பழுதடைந்து விடுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத் திற்கு உள்ளாகின்றனர்

    தண்டவாள பகுதியில் ஆட்டோ மற்றும் வாகனங்கள் வரும்போது ெரயில்வே கேட்டை திறக்க முடியாததால் எந்த நேரமும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    ஆகையால் ெரயில்வே துறை அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு ெரயில்வே கேட் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×