search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீரெட்டி"

    தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி வந்த ஸ்ரீ ரெட்டி, சமீபத்தில் தமிழ் இயக்குனர் ஒருவரை பற்றி கூறியிருந்தது யார் என்று தகவல் வெளியாகியுள்ளது. #SriReddy
    தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். சினிமா வாய்ப்பு தருவதாக ஏமாற்றி பிரபலங்கள் பலர் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அவர்கள் பெயர்களை ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் தொடர்ந்து வெளியிடுவேன் என்றும் அறிவித்து உள்ளார்.

    சில நடிகர்களும், தயாரிப்பாளர்களும் ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோக்களை சிவப்பு விளக்கு பகுதியாக பயன்படுத்தி அங்கு பெண்களிடம் செக்ஸ் வைத்துக்கொள்வதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். மேலும் சமீபத்தில், தமிழ் சினிமா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. ஆனால், இங்கும் பாலியல் தொந்தரவு இருக்கிறது. ஒரு மிகப்பெரிய இயக்குநர், பட வாய்ப்புத் தருவதாகக் கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார். நேரம் வரும்போது கண்டிப்பாக அதை பகிரங்கமாக சொல்வேன் என்று ஸ்ரீ ரெட்டி கூறியிருந்தார்.

    தற்போது தனது சமூக வலைத்தளத்தில், ‘தமிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஜி. எப்படி இருக்கீங்க... கிரீன் பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கா? வெள்ளி கொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். எனக்கு வாய்ப்பு தருவதாக சொல்லியிருந்தீர்கள். ஆனால், நாம் நிறைய ....? இன்னும் நீங்கள் எந்த வாய்ப்பும் தரவில்லை. நீங்கள் எப்போதும் நல்ல மனிதர் என பதிவு செய்திருக்கிறார். 



    ஸ்ரீரெட்டி இப்படி பதிவு செய்திருப்பது, தமிழ் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    தமிழ் சினிமாவிலும் பாலியல் தொந்தரவு இருப்பதாகவும், ஒரு மிகப்பெரிய இயக்குநர், பட வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டதாகவும் நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். #SriReddy #SriLeaks
    சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவில் பாலியல் குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் அதிக அளவில் எழுந்திருக்கிறது. இதன் உச்சக்கட்டமாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறினார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- “உங்களுடைய ஆரம்ப கால வாழ்க்கை எப்படி இருந்தது?”

    பதில்:- “நான் சிறு வயதிலேயே துணிச்சலான பெண்ணாக தான் வளர்ந்தேன். என்னுடைய குடும்பம் நடுத்தரமானது. டி.வி.யில் செய்தி வாசிப்பாளராக இருந்தேன். அங்கிருந்து சினிமாவில் நடிக்க வந்தேன்.”

    கே:- “பெரிய ஹீரோக்களை எதிர்க்கும் போது பல்வேறு சிக்கல்கள் வருமே. எப்படி சமாளிக்கிறீர்கள்?”

    ப:- “என்னைப் பொறுத்த வரை ‘வி.ஐ.பி.’, சாமானியன் என்பதெல்லாம் கிடையாது. எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறது. அல்லுரி சீதா ரமராஜூ, சே குவாரா, பகத் சிங்... இவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் படித்திருக்கிறேன். பூலான் தேவி, ஜோதிரவ் பூலே ஆகியோரை முன்மாதிரியாக நினைக்கிறேன். அதனால் எனக்கு உள்ளுக்குள் தைரியம் இருக்கிறது.”

    கே:- “உங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் ஆண்கள் மீது வெறுப்பை உண்டாக்கியிருக்கிறதா?”

    ப:- “அப்படி சொல்ல முடியாது. நான் ஆண்களுக்கு எதிரானவள் அல்ல. ஆண்களை நான் ரொம்பவும் நேசிக்கிறேன். மதிக்கிறேன். ஆனால் ஆண்கள் மட்டும் எப்படி வேண்டுமானாலும் உடை அணியலாம், எந்த நேரம் என்றாலும் வெளியே செல்லலாம். பெண்களுக்கு கட்டுப்பாடு வேண்டும் என்று சொல்வதை நான் எதிர்க்கிறேன். பெண்கள் மீது பாலியல் ரீதியிலான தொந்தரவு எழுந்தால் தட்டிக் கேட்பேன்.”



    கே:- “உங்கள் குற்றச்சாட்டில் தமிழ் இயக்குனர்களின் பெயர்களும் அடிபட்டதே?”

    ப:- “தமிழ் சினிமா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. ஆனால், இங்கும் பாலியல் தொந்தரவு இருக்கிறது. ஒரு மிகப்பெரிய இயக்குநர், பட வாய்ப்புத் தருவதாகக் கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார்.

    நேரம் வரும்போது கண்டிப்பாக அதை பகிரங்கமாக சொல்வேன். இந்த ஒரு வி‌ஷயத்தை தவிர்த்துவிட்டுப் பார்த்தால்... தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். கோவில் கட்டும் அளவுக்குக்கூட பாசம் வைக்கிறார்கள்..”

    கே:- “தெலுங்கு கதாநாயகர்கள் மீது நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா?”

    ப:- “எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் 90 சதவீதம் ஆதாரம் இருக்கிறது. பத்து சதவீதம் மட்டும் இல்லை. அமெரிக்காவில் ‘பலான வி‌ஷயத்தில் மாட்டிய தெலுங்கு நடிகைகள்’ என்கிற செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த வி‌ஷயத்தை விசாரிப்பதற்கு அரசு இறங்கி இருப்பது, என்னுடைய குற்றச்சாட்டை வலுப்படுத்துகிறது.”

    கே:- “உங்களை தமிழ் சினிமாவில் எப்போது பார்க்கலாம்?”

    ப:- “தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். என் வாழ்க்கையை தமிழ் சினிமாவிலேயே அர்ப்பணிக்க நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #SriReddy #SriLeaks
    தெலுங்கு பட உலகையே கதிகலங்க வைத்த நடிகை ஸ்ரீரெட்டி தான் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், சினிமாவிலும் எனக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டனர் என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார். #SriReddy #SriLeaks
    தெலுங்கு பட உலகில் பாலியல் தொல்லை இருப்பதாக குற்றம்சாட்டி இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை ஸ்ரீரெட்டி.
    பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளுக்கு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், படுக்கைக்கு அழைப்பதாகவும் ஸ்ரீரெட்டி புகார் கூறினார். 

    ஸ்ரீலீக்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். இதனால் தெலுங்கு நடிகர் சங்கம் சினிமாவில் நடிக்க அவருக்கு தடை விதித்தது. 

    மகளிர் ஆணையம், பாலியல் புகாரை விசாரிக்க தொடங்கியதும் ஸ்ரீரெட்டிக்கு எதிரான தடையை நீக்கி படங்களில் அவர் தொடர்ந்து நடிக்கலாம் என்று அறிவித்தனர். ஆனாலும் ஸ்ரீரெட்டிக்கு படங்கள் இல்லை. செக்ஸ் புகாருக்கு பிறகு அவரை இயக்குனர்கள் ஒதுக்குகிறார்கள்.

    பெரிய தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறியதால் மற்ற பட அதிபர்களும் தங்கள் படங்களில் ஸ்ரீரெட்டியை ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள். பெரிய நடிகர்களும் தங்கள் படங்களில் ஸ்ரீரெட்டி நடிப்பதை விரும்பவில்லை. பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது படத்தில் ஸ்ரீரெட்டியை நடிக்க வைப்பதாக வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால் அவரும் தற்போது கண்டுகொள்ளவில்லை.

    இதனால் கடந்த சில மாதங்களாக ஸ்ரீரெட்டிக்கு வருமானம் இல்லை. அன்றாட வாழ்க்கை செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில், “நான் செலவுக்கு பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன். சினிமாவிலும் எனக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டனர். என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய தெலுங்கு பட உலகுக்கு நன்றி” என்று கூறியுள்ளார். #SriReddy #SriLeaks

    பாலியல் தொல்லை என்று தெலுங்கு திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த நடிகை ஸ்ரீ ரெட்டி, நானி மீது கூறிய குற்றச்சாட்டு கூறிய நிலையில், நடிகர் நானி, ஸ்ரீரெட்டிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். #SriReddy #Nani
    பட வாய்ப்பு தர நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார். 

    ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் செக்ஸ் தொல்லை கொடுத்தவர்கள் என்று டைரக்டர் சேகர் கம்முலு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நடிகர் நானி என்று தொடர்ந்து பெயர்களை வெளியிட்டார். இந்த நிலையில், நடிகர் நானி மீது மீண்டும் பாலியல் குற்றச்சாட்டுக்களை ஸ்ரீரெட்டி கூறிவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    நானி ஒரு நடிகையின் வாழ்க்கையை கெடுத்து நரகத்தில் தள்ளிவிட்டார். நிஜ வாழ்க்கையிலும் அவர் நடிக்க கூடியவர் என்று ஏற்கனவே ஸ்ரீரெட்டி சாடி இருந்தார். இந்த நிலையில் தெலுங்கில் நானி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் டி.வி நிகழ்ச்சியில் ஸ்ரீரெட்டியை கலந்து கொள்ளவிடாமல் தடுத்ததாக தகவல் வெளியானது.

    இதனால் ஆத்திரமான ஸ்ரீரெட்டி, மீண்டும் அவர் மீது செக்ஸ் புகார் கூறினார். “நானி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடந்து கொண்டார். என்னுடன் படுக்கவில்லை என்று சத்தியம் செய்ய நானி தயாரா? எனக்கு வரும் வாய்ப்புகளை தடுக்கிறார். எனது பாவம் அவரை சும்மா விடாது.” என்று ஸ்ரீரெட்டி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 



    அதனைத் தொடர்ந்து ஸ்ரீரெட்டிக்கு நடிகர் நானி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:-

    “என் மீது ஸ்ரீரெட்டி அவதூறுகள் பரப்பி வருகிறார். அதில் உண்மை இல்லை. இத்தகையை செயல்கள் வருத்தம் அளிக்கின்றன. எனது நன்மதிப்பை கெடுக்கும் வகையில் பொய்யான தகவல் பரப்புவதை அவர் நிறுத்த வேண்டும். இதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். ஒரு வாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.” இவ்வாறு நானி கூறியுள்ளார்.

    ஸ்ரீரெட்டி-நானி மோதல் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SriReddy #SriLeaks #Nani

    பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாகவும், தானும் பலரால் பாதிக்கப்பட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி விரைவில் அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. #SriReddy #SriLeaks
    பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் செக்ஸ் தொல்லை கொடுத்தவர்கள் என்று டைரக்டர் சேகர் கம்முலு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நடிகர் நானி என்று தொடர்ந்து பெயர்களை வெளியிட்டார்.

    தெலுங்கு நடிகர் சங்கம் ஸ்ரீரெட்டியை நீக்கி வைத்து, அவருடன் யாரும் நடிக்க கூடாது என்று தடை போட்டது. இதை எதிர்த்து அரைநிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக மனித உரிமை ஆணையம், மகளிர் சங்கங்கள் இறங்கியதால் அவர் மீதான தடையை நடிகர் சங்கம் நீக்கியது.

    இந்த நிலையில் சமூக சேவை பணிகளில் ஸ்ரீரெட்டி தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளார். பெண்கள் அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து நடைபெறும் கருத்தரங்குகளிலும் பேசுகிறார். 



    ஆந்திரா ஸ்ரீசைலம் பகுதியில் உள்ள கண்மாயில் மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கிராமப்புற பெண்கள் பலர் வேலை செய்து வந்தனர். அந்த வேலையை திடீரென்று நிறுத்தி அவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். 

    இதை கண்டித்து அந்த பெண்களுடன் சேர்ந்து ஸ்ரீரெட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். விரைவில் அரசியல் கட்சி ஒன்றில் ஸ்ரீரெட்டி இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #SriReddy #SriLeaks

    ×