search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகோ கைது"

    திருப்பூர் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்ட்டார். #Vaiko

    கோவை:

    பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பு கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் அதே இடத்தில் பிரதமர் மோடியை வரவேற்று இந்து முன்னணி சார்பில் காவிக்கொடி ஏந்தி வரவேற்பு அளிக்கப்படும் என அறிவித்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இன்று அதிகாலை முதலே பஸ் நிலையம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் காலை 11.15 மணி அளவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையம் அருகே ம.தி.மு.க.வினர் கருப்புக் கொடியுடன் திரண்டனர்.

    அப்போது பா.ஜனதாவை சேர்ந்த பெண் உள்பட 2 பேர் கூட்டத்துக்குள் புகுந்தனர். அந்த பெண் ‘பாரத் மாதா கீ ஜே’ என கோ‌ஷம் எழுப்பியபடி செருப்பை தூக்கி வீசினார். அவருடன் வந்தவர் கூட்டத்தை நோக்கி கற்களை வீசினார். இதில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் உடைந்தது.

    இதனால் ஆவேசமடைந்த ம.தி.மு.க.வினர் அந்த பெண்ணை தாக்கினர் .இதனால் அங்கு பரபரப்பு அதிகரித்தது. உடனே அந்த பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு நின்றவர்கள் சிதறியடித்து ஓடினர். பின்னர் போலீசார், அந்த பெண்ணையும், அவருடன் வந்தவரையும் பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

    இதற்கிடையே அங்கு திரண்ட ம.தி.மு.க.வினர் மோடிக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தடைமீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக வைகோ மற்றும் ம.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட போது பிரதமர் மோடி நேரில் வந்து பார்வையிடவில்லை. விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால், அரசு திட்டங்கள் என்ற பெயரில் மக்களை சந்திக்க வருவது கடும் கண்டனத்துக்குரியது. எனவே தான் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vaiko

    பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர். #MDMK #Vaiko #RajivCase #Vaikoarrested
    சென்னை:
     
    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாமல் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக் கோரி இன்று கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.
     
    இந்த போராட்டத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட தோழமை கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

    அதன்படி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கவர்னர் மாளிகையின் அருகே சைதாப்பேட்டை சின்னமலை அருகே இன்று காலை ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, 7 பேரை விடுதலை செய்ய கவர்னர் மறுத்து வருவது அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானது. கண்டிக்கத்தக்கது. உடனே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.



    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துணைப் பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், மே-17 இயக்க நிர்வாகிகள், இயக்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். விடுதலை செய், விடுதலை செய், 7 பேரையும் விடுதலை செய் உள்ளிட்ட பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் வைகோ மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர். #MDMK #Vaiko #RajivCase #Vaikoarrested #Rajivmurder #Rajivmurderconvicts
    ×