search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Black Flag struggle"

    திருப்பூர் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்ட்டார். #Vaiko

    கோவை:

    பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பு கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் அதே இடத்தில் பிரதமர் மோடியை வரவேற்று இந்து முன்னணி சார்பில் காவிக்கொடி ஏந்தி வரவேற்பு அளிக்கப்படும் என அறிவித்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இன்று அதிகாலை முதலே பஸ் நிலையம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் காலை 11.15 மணி அளவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையம் அருகே ம.தி.மு.க.வினர் கருப்புக் கொடியுடன் திரண்டனர்.

    அப்போது பா.ஜனதாவை சேர்ந்த பெண் உள்பட 2 பேர் கூட்டத்துக்குள் புகுந்தனர். அந்த பெண் ‘பாரத் மாதா கீ ஜே’ என கோ‌ஷம் எழுப்பியபடி செருப்பை தூக்கி வீசினார். அவருடன் வந்தவர் கூட்டத்தை நோக்கி கற்களை வீசினார். இதில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் உடைந்தது.

    இதனால் ஆவேசமடைந்த ம.தி.மு.க.வினர் அந்த பெண்ணை தாக்கினர் .இதனால் அங்கு பரபரப்பு அதிகரித்தது. உடனே அந்த பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு நின்றவர்கள் சிதறியடித்து ஓடினர். பின்னர் போலீசார், அந்த பெண்ணையும், அவருடன் வந்தவரையும் பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

    இதற்கிடையே அங்கு திரண்ட ம.தி.மு.க.வினர் மோடிக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தடைமீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக வைகோ மற்றும் ம.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட போது பிரதமர் மோடி நேரில் வந்து பார்வையிடவில்லை. விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால், அரசு திட்டங்கள் என்ற பெயரில் மக்களை சந்திக்க வருவது கடும் கண்டனத்துக்குரியது. எனவே தான் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vaiko

    டெல்டா மாவட்டங்களில் செயல்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து நாளை கவர்னருக்கு விவசாயிகள் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். #PRPandian
    திருவாரூர்:

    அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி டெல்டா மாவட்டங்களை மையப்படுத்தி 2 மண்டலங்களில் வேதாந்தா நிறுவனமும், சிதம்பரம் நகரத்தை மையப்படுத்தி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஒரு இடத்திலும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுத்து வணிக ரீதியில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தாகியுள்ளது.

    இதை கண்டித்தும். இந்த திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    மத்திய அரசின் நேரடி பிரதிநிதியான கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை (3-ந் தேதி) திருவாரூருக்கு வருகிறார்.


    டெல்டா மாவட்டங்களில் செயல்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்தும், இந்த திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரியும், திருவாரூர் மாவட்டம் விளமல் அருகே நாளை மாலை 3 மணியளவில் கவர்னருக்கு விவசாயிகள் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

    நெல்லுக்கு குவிண்டாலுக்கு மத்திய அரசு ரூ.200 உயர்த்தி அறிவித்தது ஏமாற்றம் அளித்தது. தமிழக அரசு குவிண்டாலுக்கு ரூ.400 உயர்த்தி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ரூ.70, ரூ.50 என உயர்த்தி சன்ன ரகம் ரூ.1840-ம், சாதாரண ரகம் ரூ.1800-ம் என விலை நிர்ணயம் செய்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இதை பரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PRPandian #TNGovernor #BanwarilalPurohit
    கவர்னர் இனி எங்கு ஆய்வுக்கு சென்றாலும், தனது தலைமையில் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு. ஆனால் ஆணையத்துக்கு எதிராக கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேசி வருகிறார். இவர்களது சூழ்ச்சி வலையில் கர்நாடக முதல்வர் சிக்கி கொள்ள கூடாது. உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

    தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி நடந்ததை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாக சட்டமன்றத்தில் முதல்வர் கூறியிருக்கிறார். அப்படியென்றால் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடக்கிறதா. துப்பாக்கி சூட்டுக்கு ஆளுநர் உத்தரவிட்டாரா என முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்.

    மாவட்ட கலெக்டர், காவல் கண்காணிப்பாளர் உட்பட துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட முடியாது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையின் அடியாட்களாக காவல்துறையை பயன்படுத்தி உள்ளது.

    சம்பவம் நடந்து முடிந்த பின்னர் சில குறிப்பிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்களை காவல் துறையினர் கைது செய்வதும், வீடுகளுக்கு சென்று பெண்களை அச்சுறுத்துவதும் தொடர்ச்சியாக நடந்து வருவது மீண்டும் பதற்றம் உருவாக்க அரசு முயன்று வருகிறது. மக்கள் அதிகாரத்தை சேர்ந்த வக்கீல் வாஞ்சிநாதன் கைது செய்யப்பட்டு, அவர் வாக்குமூலம் கொடுத்ததாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஜோடிக்கப்பட்ட வழக்கு. ஸ்டெர்லைட் ஆலை மூடியதால், வேலை வாய்ப்பு இழந்தவர்களுக்கு மாற்று வேலை அளிக்க வேண்டியது அரசின் கடமை.

    இந்த பிரச்சனை குறித்து மக்களுக்கு உண்மை நிலை தெரிய வேண்டும் என்றால் உயர்நீதிமன்ற கண்காணிப்போடு சி.பி.ஐ. விசாரணை நடக்க வேண்டும். கைது நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அப்பாவி மக்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

    சேலம் - சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தில் பாதிக்கப்படுகிற விவசாயிகளிடம், பொதுமக்களிடம் கருத்துகளை அறிந்து நடவடிக்கை எடுக்க கூறி வருகிறோம். ஆனால் வருவாய்த்துறை, காவல் துறை மூலமாக அரசு பலவந்தமாக கருங்கல் நடும் பணி நடத்துகிறது. இது மத்திய அரசின் திட்டம். எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை என கூறுவது மாநில முதல்வருக்கு அழகல்ல. இந்த 8 வழி சாலையை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனம் அமல்படுத்துவது போல் காணப்படுகிறது. இதனை கண்டித்து சென்னையில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


    தமிழகத்தில் மாநில சுயாட்சிக்கு எதிராக கவர்னர் பன்வாரிலால் புரோகித் செயல்படுகிறார். அவர், முதல் அமைச்சருக்கு தெரிவிக்காமலேயே, தலைமை செயலாளர் மூலம் பயண திட்டத்தை வகுத்து கொண்டு பல்வேறு ஊர்களிலும் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

    கவர்னருக்கு கருப்புக் கொடி காட்டினால், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மிரட்டுகிறார்கள். கவர்னர் இனி எங்கு ஆய்வுக்கு சென்றாலும், எனது (முத்தரசன்) தலைமையில் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Mutharasan #TNGovernor #BanwarilalPurohit
    சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவுச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் உள்ள 92 கிராமங்களில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.
    வேலூர்:

    சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவுச் சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது. சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 277 கிலோ மீட்டரில் அமையும் இந்த சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    5 மாவட்டங்களிலும் விளைநிலங்கள், பசுமை காடுகள், மலைகள், நீர் நிலைகளை என இயற்கை வளங்களை அழித்து பசுமை வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

    இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகள், பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தங்கள் கண்ணெதிரிலேயே நிலம் பறிபோவதை பார்த்து பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    தர்மபுரி மாவட்ட விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டம் ஒரு புறம் நடந்து வந்தாலும் மறுபுறம் நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    5 மாவட்டத்திலும் எதிர்ப்பு தெரிவிப்பதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. அவசர கதியில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படுகிறது. போலீஸ் படையுடன் வரும் அதிகாரிகள், நிலத்தை அளவீடு செய்து குறியீடு கற்களை பதிக்கின்றனர். பசுமையை அழித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்து போடப்படும் பசுமை சாலை திட்டத்தில் உள்நோக்கம் இருப்பதாகவே விவசாயிகள் சங்கம் புகார் கூறுகிறது.

    சேலம், தர்மபுரி மாவட்டங்களில் மட்டும் 92 கிலோ மீட்டரில் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது.

    இதற்கான நிலம் அளவீட்டு பணிகள் கடந்த 18-ந் தேதி தொடங்கியது. தர்மபுரியில் நேற்று முன்தினம் பணிகள் முடிந்தது. சேலம் மாவட்டத்தில் 7-வது நாளாக நடந்த அளவீட்டு பணிகள் நேற்று முடிந்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 124 கிலோமீட்டர் தொலைவு சாலை அமைகிறது. சாலையின் அகலம் 110 மீட்டர் என முதலில் கணக்கிடப்பட்டது. தற்போது, 70 மீட்டர் அகலத்தில் அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் அரசுக்கு சொந்தமான 153 ஹெக்டர் நிலம், 18 ஹெக்டர் வன பரப்பு, 690 ஹெக்டர் தரிசு நிலம், 141 ஹெக்டர் விளை நிலம் உள்பட 861 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

    திருவண்ணாமலையில் சுமார் 92 கிராமங்களை சேர்ந்த 30 ஆயிரம் குடும்பம் பாதிக்கப்படுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை செங்கம், கலசப்பாக்கம் தாலுகாவில் 30 கிலோமீட்டர் தொலைவிற்கு சர்வே முடிந்துவிட்டது. 261 சிறு விவசாயிகள், 158 குறு விவசாயிகள், 35 பெரு விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    செங்கம் அடுத்த மண்மலை, காத்தமடுவு கிராமங்களில் நில அளவீடு பணி இன்று நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் அதிகாரிகள் நில அளவீடு பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பசுமை சாலையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இன்று கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், புதுப்பாளையம், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய சுற்று வட்டார பகுதி கிராமங்களில் நார்த்தம் பூண்டி, முத்தரசம்பூண்டி, நயம்பாடி, நம்மியந்தல், நீப்பந்துறை உள்பட 92 கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.

    அடுத்த மாதம் 6-ந் தேதி 8 வழிச்சாலை அறிவிப்பு அரசாணையை எரித்து போராட்டம் நடத்தவும் விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

    மேலும் ஜனாதிபதி, பிரதமர், முதல்-அமைச்சர், கலெக்டர் மற்றும் நில எடுப்பு வருவாய்த்துறை அலுவலர் ஆகியோருக்கு ஆட்சேபனை மனுக்களை நேரடியாகவும், பதிவு தபால் மற்றும் மின் அஞ்சலில் அனுப்பவும் 8 வழி பசுமை சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    பசுமை வழி சாலை அமைக்கப்படுவதால் பாதகங்கள் குறித்து விவசாய சங்க நிர்வாகிகள் கூறுகையில்:-

    பசுமை சாலை திட்டத்தால் கஞ்சலை, ஜருகு மலை, கல்வராயன் மலை, வேடியப்பன் மலை, தீர்த்த மலை என மீண்டும் உருவாக்க முடியாத 8 மலைகள் பாதிக்கப்படுகின்றன.

    நீர்நிலைகள் அழிக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதிப்படையும். உணவு பொருட்களை வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை போல நீரையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சூழல் ஏற்படும். உணவு பஞ்சம் ஏற்படும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி விடும் என்று கூறினர்.


    ×