search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெட்டியவர்"

    • நாமக்கல் வசந்தபுரம் நாகராஜ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருள் (வயது 52). இவர் அதே பகுதியில் ெசாந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.
    • அருள் லாரியில் இருந்த அரிவாளை எடுத்து வந்து கோபாலின் கையை வெட்டினார். இதனால் கோபால் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் வசந்தபுரம் நாகராஜ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருள் (வயது 52). இவர் அதே பகுதியில் ெசாந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கோபால் (42) என்பவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பருப்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்து நேற்று இரவு லாரியை வீட்டின் முன்பு சாலையில் நிறுத்தி இருந்தார்.

    அரிவாள் வெட்டு

    அப்போது அந்த வழியாக லாரியில் வந்த அருள், கோபாலிடம் லாரியை ஓரமாக நிறுத்தாமல் ஏன் இடையூறாக நிறுத்தி இருக்கிறாயே, நான் எப்படி போவது என கூறி யுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள் லாரியில் இருந்த அரிவாளை எடுத்து வந்து கோபாலின் கையை வெட்டினார். இதனால் கோபால் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர்.

    கைது

    இதையடுத்து கோபாலை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின்பேரில் நாமக்கல் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை வழக்குப்பதிவு செய்து அருளை கைது செய்தார்.

    ×