search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டு வசதி வாரியம்"

    • அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2012-ம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு.
    • 2023-ம் ஆண்டு மார்ச் எம்.பி., எம்.எல்.ஏ. க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவு.

    தமிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். தற்போது இவர் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

    கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பாதுகாவலராக வேலை செய்த போலீஸ் அதிகாரி கணேசனுக்கு முறைகேடாக ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2012-ம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் இருந்து, ஐ.பெரியசாமியை விடுவித்து கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் எம்.பி., எம்.எல்.ஏ. க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

    இந்நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு, விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • கடந்த ஆண்டு டெண்டர் கோரி இருப்பதாக சொல்லப்படுகிறது.
    • ஒதுக்கப்பட்ட இடத்தை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு திடலாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது.

    திருநின்றவூர்:

    ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 116 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கு சுமார் 6 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் உள்ள காலிஇடத்தில் பஸ்நிலையம் அமைக்க 1.54 ஏக்கர் நிலம், நூலத்துக்காக 3625 சதுர அடி நிலம், ஆஸ்பத்திரி கட்ட 4368 சதுர அடி நிலம், தபால் நிலையம் அமைக்க 3675 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்த இடத்தில் முதல்கட்டமாக 6920 சதுர மீட்டர் இடத்தில் 43 மனைகளும் 2 கடைகளும் உருவாக்கி விற்பனை செய்ய தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த ஆண்டு டெண்டர் கோரி இருப்பதாக சொல்லப்படுகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழ்நாடு வீட்டு வசதி நிர்வாகம் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விற்பனை செய்ய முயல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு திடலாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வீட்டுவசதி வாரிய இடத்தினை விற்பனை செய்ய முயற்சி நடக்கிறது. இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து பல்வேறு புகார்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சென்று உள்ளது. பஸ்நிலையம், நூலகம், தபால் நிலையம், ஆஸ்பத்திரி அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தை இதுவரை அந்தந்த துறையிடம் ஒப்படைக்கவில்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

    • பவானிசாகர் அணையில் இருந்து இன்று காலை நன்செய் முதல் போக பாசனத்திற்கு அமைச்சர் முத்துசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.
    • வீட்டு வசதி வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து இன்று காலை நன்செய் முதல் போக பாசனத்திற்கு அமைச்சர் முத்துசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பவானிசாகர் அணையில் போதுமான அளவிற்கு நீர் இருக்கிறது. எனவே நடப்பாண்டு தண்ணீர் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. ஏற்கனவே பவானிசாகர் அணை நிரம்பி வழிவதால் கால்வாயில் இரு தினங்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது.

    எனினும் அதிகாரப் பூர்வமாக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதலில் 500 கனஅடி தண்ணீர் விடப்படும். பிறகு அது படிப்படியாக 2300 கன அடி வரை உயரும். கடந்தாண்டு பிரதான கால்வாயில் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.

    தற்பொழுது முன்னேற்பாடு எடுக்கப்பட்டுள்ளது. எனவே உடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. விவசாயி களுக்கு தேவையான இடுபொருட்கள் கையிருப்பில் உள்ளன .

    புதிதாக பாரம்பரிய ரகமான தூயமல்லி என்ற நெல் விதையை மூன்று டன் விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம். பாசன கால்வாய்கள் தேர்தல் துவக்கப்பட்டது. படிப்படியாக அனைத்து அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படும்.

    அத்திக்கடவு அவினாசி திட்டம் காலதாமதமாக அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. தண்ணீர் கொண்டு செல்லும் பைப்புகள் போடப்படுவது உள்ள சிக்கல்கள் காரணமாக தாமதம் ஏற்படுகிறது.

    தாளவாடி மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் கர்நாடக மாநிலத்துக்கு செல்கிறது. இதை தாளவாடி பகுதியில் பயன்படுத்த ஆய்வு நடத்த ப்படும்.

    தெங்குமரஹடா பகுதியில் உள்ள குடும்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற ஈரோடு, கோவை, நீலகிரி கலெக்டர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வும் பரிசீலனையில் உள்ளது.

    கேரள மாநிலம் பாண்டியாறு, புன்னம்புழா நதி நீரை மாயாற்றில் சேர்ப்பது குறித்த ஆய்வும் நடைபெற்று வருகிறது. கீழ்பவானி பாசன கால்வாயை நவீனப்ப டுத்த அரசு திட்டமிட்டது .

    விவசாயிகள் இரு பிரிவாகப் பிரிந்து இத்திட்ட த்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாக நீதிமன்றங்களை அணுகி உள்ளனர்.

    அரசைப் பொறுத்தவரை இரு பிரிவினரும் அமர்ந்து பேசி இப்பிரச்சினையில் ஒரு சுமுகமான தீர்வு காண முயற்சி செய்து வருகிறது. பவானிசாகர் அணை உபரி நீரை அருகில் உள்ள குளம் குட்டைகளில் நிரப்ப ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைதரம் உயர்த்தப்பட்டு அனைத்து வசதிகளும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டு வசதி வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும். தற்காலிக ஊழியர்கள் சம்பந்தமாக சி.எம்.டி.ஏ. நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்

    ×