search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in the Housing Board"

    • பவானிசாகர் அணையில் இருந்து இன்று காலை நன்செய் முதல் போக பாசனத்திற்கு அமைச்சர் முத்துசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.
    • வீட்டு வசதி வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து இன்று காலை நன்செய் முதல் போக பாசனத்திற்கு அமைச்சர் முத்துசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பவானிசாகர் அணையில் போதுமான அளவிற்கு நீர் இருக்கிறது. எனவே நடப்பாண்டு தண்ணீர் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. ஏற்கனவே பவானிசாகர் அணை நிரம்பி வழிவதால் கால்வாயில் இரு தினங்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது.

    எனினும் அதிகாரப் பூர்வமாக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதலில் 500 கனஅடி தண்ணீர் விடப்படும். பிறகு அது படிப்படியாக 2300 கன அடி வரை உயரும். கடந்தாண்டு பிரதான கால்வாயில் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.

    தற்பொழுது முன்னேற்பாடு எடுக்கப்பட்டுள்ளது. எனவே உடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. விவசாயி களுக்கு தேவையான இடுபொருட்கள் கையிருப்பில் உள்ளன .

    புதிதாக பாரம்பரிய ரகமான தூயமல்லி என்ற நெல் விதையை மூன்று டன் விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம். பாசன கால்வாய்கள் தேர்தல் துவக்கப்பட்டது. படிப்படியாக அனைத்து அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படும்.

    அத்திக்கடவு அவினாசி திட்டம் காலதாமதமாக அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. தண்ணீர் கொண்டு செல்லும் பைப்புகள் போடப்படுவது உள்ள சிக்கல்கள் காரணமாக தாமதம் ஏற்படுகிறது.

    தாளவாடி மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் கர்நாடக மாநிலத்துக்கு செல்கிறது. இதை தாளவாடி பகுதியில் பயன்படுத்த ஆய்வு நடத்த ப்படும்.

    தெங்குமரஹடா பகுதியில் உள்ள குடும்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற ஈரோடு, கோவை, நீலகிரி கலெக்டர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வும் பரிசீலனையில் உள்ளது.

    கேரள மாநிலம் பாண்டியாறு, புன்னம்புழா நதி நீரை மாயாற்றில் சேர்ப்பது குறித்த ஆய்வும் நடைபெற்று வருகிறது. கீழ்பவானி பாசன கால்வாயை நவீனப்ப டுத்த அரசு திட்டமிட்டது .

    விவசாயிகள் இரு பிரிவாகப் பிரிந்து இத்திட்ட த்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாக நீதிமன்றங்களை அணுகி உள்ளனர்.

    அரசைப் பொறுத்தவரை இரு பிரிவினரும் அமர்ந்து பேசி இப்பிரச்சினையில் ஒரு சுமுகமான தீர்வு காண முயற்சி செய்து வருகிறது. பவானிசாகர் அணை உபரி நீரை அருகில் உள்ள குளம் குட்டைகளில் நிரப்ப ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைதரம் உயர்த்தப்பட்டு அனைத்து வசதிகளும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டு வசதி வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும். தற்காலிக ஊழியர்கள் சம்பந்தமாக சி.எம்.டி.ஏ. நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்

    ×