search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு உறுதிமொழி"

    • பா.ம.க. சார்பில் கொடியேற்றி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    • முனியாண்டி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மூடுவார் பட்டி ஊராட்சியில் பாட் டாளி மக்கள் கட்சி தலை வர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளையொட்டி கட்சி யின் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    மேலும் நேர்மையான அரசியல் குறித்து விழிப்பு ணர்வு உறுதிமொழி எடுத் துக் கொண்டனர். இதற்கு ஒன்றிய பொருளாளர் ரேவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட தலைவர் செல்லம் பட்டி முருகன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாவட்ட அமைப்பு செயலா ளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் ஈஸ்வரன், குரு பாலமுருகன், நிர்வாகிகள் நாராயணன், அமரன், முருகன், ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அலங்காநல்லூர் முனி யாண்டி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகள் போதைபொருள் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டதுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி இன்று ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நடைபெறும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    திண்டுக்கல்லில் எம்.வி.எம் அரசு மகளிர் கலைக்கல்லூரி, மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மேயர் இளமதி, துைணமேயர் ராஜப்பா உள்பட பலர் பங்கேற்றனர். ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்ட திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விசாகன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர், சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார் உள்பட அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    பழனி நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ தலைமையிலும், வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காந்திராஜன் எம்.எல்.ஏ தலைமையிலும், நத்தம் துரைகமலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நத்தம் பேரூராட்சி தலைவர் தலைமையிலும், என்.பி.ஆர் கல்லூரியில் நத்தம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தலைமையிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

    நிலக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிலக்கோட்டை பேரூராட்சி தலைவர் தலைமையிலும், மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தலைமையிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. மாணவ-மாணவிகள் போதைபொருள் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டதுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ×