search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு உபகரணங்கள்"

    • விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது
    • சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகரின் பொழுதுபோக்கு அம்சமாக விளங்கும் இந்த பூங்காவிற்கு விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகளவு வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் நாகர்கோவில் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பூங்காவிற்கு வருகின்றனர். கைக்குழந்தைகளுடனும், குடும்பத்தோடும் ஏராளமா னோர் வந்து செல்கிறார்கள். குழந்தை கள் இங்கு உள்ள விளையாட்டு உபகரணங்க ளில் விளையாடி மகிழ்வா ர்கள். செல்பி பாயிண்டில் நின்று பொதுமக்கள் புகைப்ப டம் எடுத்து மகிழ்வார்கள்.

    நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் சூழ்நி லையில் பூங்காவில் உள்ள ஒரு சில விளையாட்டு உபகர ணங்கள் மோசமாக காண ப்படு கிறது. ஊஞ்சல்கள் உடைந்து தொங்குகின்றன. மேலும் இங்குள்ள செயற்கை நீர் ஊற்றுகளும் செயல்ப டாமல் மோசமான நிலையில் காணப்படு கின்றன. அந்த செயற்கை நீரூற்று களை சீரமைத்து செயல்படுத்த மாநகராட்சி மேயர் நடவடி க்கை எடுக்க வேண்டும்.

    இது தவிர பூங்காவிற்குள் ஆங்காங்கே மது பாட்டி ல்களும் குவிந்து கிடக்கின்றன. மாலை நேரங்களில் ஒதுக்குப்புறமான இடத்தில் சிலர் அமர்ந்து மது அருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில் பூங்காவில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டு ம். உடைந்து கிடக்கும் விளையாட்டு உபகர ணங்கள் மற்றும் இருக்கைகளை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    இது குறித்து பூங்காவிற்கு வந்த பொதுமக்கள் கூறுகை யில், நுழைவு கட்டணம் கொடுத்து விட்டு பூங்காவிற்கு வந்து சிறிது நேரம் குழந்தைகளுடன் நேரத்தை போக்கி செல்லலாம் என்று வருகிறோம். ஆனால் இங்கு போதுமான விளையாட்டு உபகரணங்கள் இல்லாத நிலை உள்ளது. சில விளை யாட்டு உபகரணங்கள் உடைந்து காணப்படுகின்றன. மாநகராட்சி நிர்வாகம் கூடுதலாக விளை யாட்டு உபகரணங்களை அமைக்க நடவடிக்கை எடுப்பது டன் உடைந்து கிடக்கும் விளை யாட்டு உபகரணங்களை சரி செய்யவும் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

    • கால்பந்து, கிரிக்கெட் பேட், பந்து, ஷூக்கள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • உடல் மனம் இரண்டும் நேர்கோட்டில் சென்று, மாணவர்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும்.

    கடலூர்:

    விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தினந்தோறும் பயிற்சி மேற்கொண்டு வருவது வழக்கம். இங்கு கால்பந்து, கிரிக்கெட், ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு மாணவர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர்.இந்நிலையில் இன்று காலை உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக அரசு பள்ளி மைதானத்திற்கு விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் வந்தார். அப்போது கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சியில் ஈடுபட்ட 20-க்கும் மேற்ப்பட்ட மாணவர்களிடையே பேசினார்.

    அவர்களின் ஏழ்மை நிலையை அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், மாணவ ர்களை ஊக்குவிக்கும் விதமாக புதிய கால்பந்து, கிரிக்கெட் பேட், பந்து, ஷூக்கள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இது பற்றி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் கூறும்போது, விளை யாட்டில் ஈடுபடும்போது உடல் மனம் இரண்டும் நேர்கோட்டில் சென்று, மாணவர்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும். அதனால் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கினேன் என தெரிவித்தார். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தமிழ்நாடு போலீஸ் துறை ஆக்கப்பூர்வமான உதவிகளை வழங்கும் எனவும் தெரிவித்தார். அப்போது தனிப்பிரிவு போலீசார் பாலமுருகன், சீனு, ராமு, ஜனா, மணிகண்டன் உள்ளி ட்டோர் உடனிருந்தனர்.

    • நிரந்தர உபகரணமான சார்பும், டிஸ்கஸ் இரும்பினால் இல்லாமல் கார்பன் கலந்து ரப்பரால் இருக்கிறது.
    • கால்பந்து போஸ்ட் ரிலே பேட்டர்சன், ஈட்டி ஏறிதல் போன்றவை பிளாஸ்டிக் உபகரணமாக உள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்கம் மாநில பொருளாளர் கரு. தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் அனைத்து அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்க பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    ஆனால் இந்த உபகரணங்கள் தரமற்றதாகவும் மாணவர்கள் பயிற்சி செய்ய பயனற்றதாகவும் உள்ளன.

    நிரந்தர உபகரணமான சார்பும், டிஸ்கஸ் இரும்பினால் இல்லாமல் கார்பன் கலந்து ரப்பரால் இருக்கிறது. கால்பந்து போஸ்ட் ரிலே பேட்டர்சன், ஈட்டி ஏறிதல் போன்றவை பிளாஸ்டிக் உபகரணமாக உள்ளது.

    இதை மாணவர்கள் பயிற்சி செய்யவும் பயன்படுத்தவும் முடியாது.

    பல பொருட்கள் உடைந்து உள்ளன.

    அவையாவும் பயன்படுத்த முடியாது. எனவே அனைத்து பொருட்களும் திரும்ப பெற்று தரமான இரும்பினால் ஆன பொருட்கள் உரிய முறையில் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×