search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பமூடு மாநகராட்சி பூங்காவில் உடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள்
    X

    வேப்பமூடு மாநகராட்சி பூங்காவில் உடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள்

    • விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது
    • சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகரின் பொழுதுபோக்கு அம்சமாக விளங்கும் இந்த பூங்காவிற்கு விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகளவு வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் நாகர்கோவில் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பூங்காவிற்கு வருகின்றனர். கைக்குழந்தைகளுடனும், குடும்பத்தோடும் ஏராளமா னோர் வந்து செல்கிறார்கள். குழந்தை கள் இங்கு உள்ள விளையாட்டு உபகரணங்க ளில் விளையாடி மகிழ்வா ர்கள். செல்பி பாயிண்டில் நின்று பொதுமக்கள் புகைப்ப டம் எடுத்து மகிழ்வார்கள்.

    நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் சூழ்நி லையில் பூங்காவில் உள்ள ஒரு சில விளையாட்டு உபகர ணங்கள் மோசமாக காண ப்படு கிறது. ஊஞ்சல்கள் உடைந்து தொங்குகின்றன. மேலும் இங்குள்ள செயற்கை நீர் ஊற்றுகளும் செயல்ப டாமல் மோசமான நிலையில் காணப்படு கின்றன. அந்த செயற்கை நீரூற்று களை சீரமைத்து செயல்படுத்த மாநகராட்சி மேயர் நடவடி க்கை எடுக்க வேண்டும்.

    இது தவிர பூங்காவிற்குள் ஆங்காங்கே மது பாட்டி ல்களும் குவிந்து கிடக்கின்றன. மாலை நேரங்களில் ஒதுக்குப்புறமான இடத்தில் சிலர் அமர்ந்து மது அருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில் பூங்காவில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டு ம். உடைந்து கிடக்கும் விளையாட்டு உபகர ணங்கள் மற்றும் இருக்கைகளை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    இது குறித்து பூங்காவிற்கு வந்த பொதுமக்கள் கூறுகை யில், நுழைவு கட்டணம் கொடுத்து விட்டு பூங்காவிற்கு வந்து சிறிது நேரம் குழந்தைகளுடன் நேரத்தை போக்கி செல்லலாம் என்று வருகிறோம். ஆனால் இங்கு போதுமான விளையாட்டு உபகரணங்கள் இல்லாத நிலை உள்ளது. சில விளை யாட்டு உபகரணங்கள் உடைந்து காணப்படுகின்றன. மாநகராட்சி நிர்வாகம் கூடுதலாக விளை யாட்டு உபகரணங்களை அமைக்க நடவடிக்கை எடுப்பது டன் உடைந்து கிடக்கும் விளை யாட்டு உபகரணங்களை சரி செய்யவும் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

    Next Story
    ×