என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விளக்கம் கேட்டு"
- வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது.
- இதில் 140-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் 140-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது தூய்மை பணியாளர்கள் வேலை குறைபாடு காரணமாக, அதிருப்தியில் இருந்த பொதுமக்கள் செயல் அலுவலர் திருநாவுக்கரசிடம் புகார் அளித்தனர். பொதுமக்கள் புகாரின் பேரில் வேலூர் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவரும் சரியான நேரத்தில் பணிக்கு வந்து உரிய வேலைகளை செய்ய வேண்டும் என எச்சரித்தார்.
பேரூராட்சி ஊழியர்களை கண்காணித்த செயல் அலுவலர் திருநாவுக்கரசு, சரியான நேரத்துக்கு பணிக்கு வராததாலும் மேலும் கொடுத்த பணிகளை அலச்சியமாக செய்த காரணத்தினாலும், துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன், தாமரைச்செல்வி மற்றும் மின் பணியாளர் சீனிவாசன் ஆகியோருக்கு உரிய விளக்கம் கேட்டு மெமோ கொடுத்துள்ளார்.இது வேலூர் பேரூராட்சி ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வேலூர் பேரூராட்சியில் உள்ள அனைத்து ஊழியர்களும் பஞ்சாயத்து நிர்வாகம் கொடுக்கும் பணிகளை உரிய நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். வேலை செய்யாமல் ஏமாற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.
வேலூர் வேலூர் பேரூராட்சிக்கு செயல்அலுவலர் திருநாவுக்கரசு பொறுப்பேற்று ஒரு மாதமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
- தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு ரெயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான அறிவியல் பாட செய்முறைத்தேர்வு கடந்த 20-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த தனித்தேர்வரான அந்தியூரை சேர்ந்த ஆம்புலன்சு டிரைவர் மணிகண்டன் (வயது 25) என்பவர் நேற்று பள்ளிக்கு சென்றார்.
அப்போது அங்கு பணியில் இருந்த தலைமை ஆசிரியை மணிகண்டனிடம் பயிற்சி வகுப்புக்கு முறையாக வராததால் செய்முறை தேர்வுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றால் ஏ 4 அளவு கொண்ட வெள்ளை காகிதம் 4 பண்டல்களை வாங்கி வந்து கொடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் மணிகண்டனும் அருகில் உள்ள கடைக்கு சென்று வெள்ளை காகித பண்டல்களை வாங்கி வந்தார்.
இதேபோல் நன்னடத்தை சான்றிதழ் வாங்க வந்த ஒரு வாலிபரிடமும் 2 பண்டல்கள் வெள்ளை காகிதம் வாங்கி வர சொன்னதாக கூறப்படுகிறது.
இதனால் மணி கண்டன் ஆசிரியை களிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் சூரம்பட்டி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது தலைமை ஆசிரியை கூறுகையில், "இந்த பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து பல்வேறு பொருட்களை வாங்கி கொடுத்து இருக்கிறார்கள்.
அதுபோல் வெள்ளை காகித பண்டல்களையும் விருப்பத்தின்பேரில் வாங்கி கொடுத்தார்கள். ஆனால் மணிகண்டனிடம் நாங்கள் காகித பண்டல்களை வாங்கி வரச்சொல்லி கேட்க வில்லை" என்று கூறினார்.
இதையடுத்து மணிகண்டனை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நடந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
- உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து அந்த அறையை பூட்டினர்
- 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மருத்துவத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்
ஈரோடு,
ஈரோடு சத்தி ரோட்டில் ஐஸ்வர்யா கருத்தரித்தல் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் உள்ள ஸ்கேன் மையம் உரிய உரிமம் இல்லாமல் செயல்பட்டு வருவதாக ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு புகார்கள் சென்றது.
இதனை அடுத்து அவரது உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குனர் பிரேம குமாரி தலைமையில் மருத்துவக் குழு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்ட னர்.
அப்போது ஆஸ்பத்திரியில் உள்ள ஆவணங்களை சரிபார்த்தனர். புகார் தெரிவிக்கப்பட்ட ஸ்கேன் மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஸ்கேன் மையத்தில் எத்தனை கருவிகள் பயன்படுத்தப்படு கிறது.
அந்த ஸ்கேன் மையத்துக்கு உரிமம் பெறப்பட்டுள்ளதா? மருத்துவ உபகரணங்கள் யார் பயன்படுத்துகிறார்கள். தினமும் எத்தனை பேருக்கு ஸ்கேன் மையம் மூலம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உள்ளிட்ட கேள்விகளை அதிகாரிகள் எழுப்பினர்.
ஸ்கேன் மையத்துக்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் உள்ளிட்ட விவரங்களையும் அதிகாரிகள் கேட்டறிந்தனர். அப்போது ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பித்தனர். மற்ற ஆவணங்கள் சரியாக இருந்த போதும் ஸ்கேன் மையத்துக்கு உரிய உரிமம் பெறப்படவில்லை என்பது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து அந்த அறையை பூட்டினர்.
மேலும் ஸ்கேன் மையம் இயக்கியது தொடர்பாக 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மருத்துவத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்