என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Aishwarya Fertility Hospital"
- உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து அந்த அறையை பூட்டினர்
- 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மருத்துவத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்
ஈரோடு,
ஈரோடு சத்தி ரோட்டில் ஐஸ்வர்யா கருத்தரித்தல் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் உள்ள ஸ்கேன் மையம் உரிய உரிமம் இல்லாமல் செயல்பட்டு வருவதாக ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு புகார்கள் சென்றது.
இதனை அடுத்து அவரது உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குனர் பிரேம குமாரி தலைமையில் மருத்துவக் குழு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்ட னர்.
அப்போது ஆஸ்பத்திரியில் உள்ள ஆவணங்களை சரிபார்த்தனர். புகார் தெரிவிக்கப்பட்ட ஸ்கேன் மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஸ்கேன் மையத்தில் எத்தனை கருவிகள் பயன்படுத்தப்படு கிறது.
அந்த ஸ்கேன் மையத்துக்கு உரிமம் பெறப்பட்டுள்ளதா? மருத்துவ உபகரணங்கள் யார் பயன்படுத்துகிறார்கள். தினமும் எத்தனை பேருக்கு ஸ்கேன் மையம் மூலம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உள்ளிட்ட கேள்விகளை அதிகாரிகள் எழுப்பினர்.
ஸ்கேன் மையத்துக்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் உள்ளிட்ட விவரங்களையும் அதிகாரிகள் கேட்டறிந்தனர். அப்போது ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பித்தனர். மற்ற ஆவணங்கள் சரியாக இருந்த போதும் ஸ்கேன் மையத்துக்கு உரிய உரிமம் பெறப்படவில்லை என்பது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து அந்த அறையை பூட்டினர்.
மேலும் ஸ்கேன் மையம் இயக்கியது தொடர்பாக 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மருத்துவத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்