search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வில்வம்"

    • ஓம் கந்தனைக் கையால் அமர்த்தினாய் போற்றி...
    • ஓம் காலமெல்லாம் ஈசன் சிந்தனையே போற்றி...

    அன்பின் வடிவே போற்றி

    ஓம் அறத்தின் உருவே போற்றி

    ஓம் அகிலத்தை காப்பாய் போற்றி

    ஓம் அரனுக்குக் காவலனே போற்றி

    ஓம் அரியாய் வந்து அமர்ந்தவனே போற்றி

    ஓம் அம்பலக் கூத்தனே போற்றி

    ஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றி

    ஓம் இருளை ஒழிப்பவனே போற்றி

    ஓம் இடபமே போற்றி

    ஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி

    ஓம் ஈகை உடையவனே போற்றி

    ஓம் உலக ரட்சகனே போற்றி

    ஓம் உபதேச காரணனே போற்றி

    ஓம் ஊக்கமுடையவனே போற்றி

    ஓம் எருது உருவம் கொண்டவனே போற்றி

    ஓம் எங்களுக்கு வரம் தருவாய் போற்றி

    ஓம் ஏவல்களை ஒழித்தவனே போற்றி

    ஓம் ஐயன்பால் அமர்ந்தவனே போற்றி

    ஓம் ஒப்பில்லாத தேவனே போற்றி

    ஓம் ஓங்கார வடிவானவனே போற்றி

    ஓம் ஒளடதமாய் இருப்பவனே போற்றி

    ஓம் கணநாயகனே போற்றி

    ஓம் கஷ்டங்களைப் போக்குவாய் போற்றி

    ஓம் கல்யாண மங்களமே போற்றி

    ஓம் கலைகள் பல தெரிந்தோய் போற்றி

    ஓம் கற்பகத் தருநிழல் அமர்ந்தாய் போற்றி

    ஓம் கஸ்தூரி நிற ஒளி அணிந்தாய் போற்றி

    ஓம் கவலைகளை ஒழிக்கும் வல்லவனே போற்றி

    ஓம் காலனுக்கும் காவலனே போற்றி

    ஓம் கிரிவல்லயன் துணையே போற்றி

    ஓம் கீர்த்திகள் பல பெற்றாய் போற்றி

    ஓம் குணநிதியே போற்றி

    ஓம் குற்றம் களைவாய் போற்றி

    ஓம் கூத்தனுக்கு மத்தளம் அடித்தாய் போற்றி

    ஓம் கோலங்கள் பல செய்வாய் போற்றி

    ஓம் கைலாச வாகனனே போற்றி

    ஓம் கந்தனைக் கையால் அமர்த்தினாய் போற்றி

    ஓம் காலமெல்லாம் ஈசன் சிந்தனையே போற்றி

    ஓம் பஞ்சாசட்ர ஜபம் செய்பவனே போற்றி

    ஓம் பஞ்சலிங்கத்தில் ஒருவனாய் ஆனாய் போற்றி

    ஓம் பரமசிவன் தன்மை தெரிந்தோய் போற்றி

    ஓம் பார்வதிக்கும் வாகனமாய் நின்றாய் போற்றி

    ஓம் பிரதோஷ காலம் உடையனே போற்றி

    ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி

    ஓம் பிஞ்ஞகன் ஏவல் செய்வாய் போற்றி

    ஓம் புகழ்கள் பல பெற்றாய் போற்றி

    ஓம் பூதங்களுக்குத் தலைவனே போற்றி

    ஓம் பூதப்பிரதேச பிசாசுகளை அடக்குவாய் போற்றி

    ஓம் மகாதேவனே போற்றி

    ஓம் மகிமை பல செய்வாய் போற்றி

    ஓம் மகேஸ்வரன் தூதனே போற்றி

    ஓம் மங்கள நாயகனே போற்றி

    ஓம் மதோன்மத்தன் போற்றி

    ஓம் மஞ்சள் மகிமை கொடுப்பாய் போற்றி

    ஓம் மணங்கள் செய் காரணனே போற்றி

    ஓம் யந்திர மகிமை உனக்கே போற்றி

    ஓம் அகிலமெல்லாம் உன் அருள் போற்றி

    ஓம் மதங்கள் மேல் கொடி ஆனாய் போற்றி

    ஓம் லட்சியமெல்லாம் உன் அருள் போற்றி

    ஓம் தட்சனுக்கு உபதேசம் செய்தாய் போற்றி

    ஓம் தண்டங்களின் மேல் அறிந்தாய் போற்றி

    ஓம் தயாபரம் அருள் பெற்றவனே போற்றி

    ஓம் தஞ்சமென்றவர்களுக்கு அருள்செய்வாய் போற்றி

    ஓம் நஞ்சுண்டவனை நாயகனாய் அடைந்தாய் போற்றி

    ஓம் நாகநந்தனின் நயனம் தெரிந்தவனே போற்றி

    ஓம் நாதமும் பிந்துவும் ஆனாய் போற்றி

    ஓம் பழமும் சுவையும் நீயே போற்றி

    ஓம் பண்புகள் பல செய்வாய் போற்றி

    ஓம் பார் எல்லாம் உன்புகழ் போற்றி

    ஓம் பிறவிப் பிணி அறுப்பாய் போற்றி

    ஓம் அடியவர்க்கெல்லாம் அன்பே போற்றி

    ஓம் ஆண்டவனிடம் அன்பு கொண்டாய் போற்றி

    ஓம் ஆதார சக்திமயம் பெற்றாய் போற்றி

    ஓம் சிவனின் வாகனமானாய் போற்றி

    ஓம் இன்னல் தீர்க்கும் இறைவனே போற்றி

    ஓம் நீண்ட கொம்புடையவனே போற்றி

    ஓம் நீலாயதாட்சி அருள் நின்றாய் போற்றி

    ஓம் வேதங்களை காலாய் உடையவனே போற்றி

    ஓம் வேள்விக்குத் தலைவனே போற்றி

    ஓம் வித்யா காரணனே போற்றி

    ஓம் விவேகம் எனக்குத் தருவாய் போற்றி

    ஓம் விண்ணுலகம் செல்லும் வழியே போற்றி

    ஓம் வில்வத்தின் மகிமையே போற்றி

    ஓம் விஸ்வே உன் வல்லமையே போற்றி

    ஓம் வேல் உடையவனே போற்றி

    ஓம் மகா காணனே போற்றி

    ஓம் மக்கள் பேறு தருவாய் போற்றி

    ஓம் மாயைகளை அகற்றுவாய் போற்றி

    ஓம் வெள்ளை நிறம் உடையாய் போற்றி

    ஓம் உலகம் அறிந்த உத்தமனே போற்றி

    ஓம் உன் மகிமை உலகமெல்லாம் போற்றி

    ஓம் ஊஞ்சல் ஆட்டுபவனே போற்றி

    ஓம் ஊடலுடக்குதவியவனே போற்றி

    ஓம் உபதேசம் பெற்றவனே போற்றி

    ஓம் உலகுக்கு அருள்வாய் போற்றி

    ஓம் பிழைகள் பொறுப்பாய் போற்றி

    ஓம் பிள்ளையார் சோதரனே போற்றி

    ஓம் மாயை ஒடுக்கும் மாடாய் நின்றாய் போற்றி

    ஓம் மாமன்னரும் உன் பணி செய்வாய் போற்றி

    ஓம் மகதேவன் கருணையே போற்றி

    ஓம் மகாவிஷ்ணுவே போற்றி

    ஓம் பரப்பிரம்மமே போற்றி

    • புனேயில் பாண்டேஸ்வரராக காட்சிதரும் இறைவனின் திருக்கோவிலில் புராதனச் சிறப்போடு, புனிதம் நிறைந்ததாக அமைந்திருக்கும் கருவறை நந்தி.
    • நஞ்சன்கூடு ஆலயத்தின் உள்ளே நுழையும்போது நம்மை நந்தி பார்ப்பதுபோல் திசை மாறி அமைந்திருப்பது வித்தியாசமானது.

    நந்தி என்றால் ஆனந்தத்தைத் தருபவர் என்று பொருள். நல்லன யாவும் நந்தி தரிசனத்தால் கிட்டும் என்பது நம்பிக்கை. நலமும் வளமும் பெற சிறப்பான சில நந்திகளை தரிசிப்போம்.

    தஞ்சாவூர் நந்தி: நமக்கு மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் இருப்பவர்களுக்கும் கூட நந்தி என்றால் இந்த தஞ்சை நந்தியின் நினைவுதான் வரும். அளவில் மட்டுமல்ல அருளிலும் பெரியவர் இவர்.

    மதுரை நந்தி: மதுரை புதுமண்டபம் முன்பாக கீழ ஆவணி மூல வீதியில் சுதையால் அமைக்கப்பட்டுள்ள இந்த நந்தி கம்பீரம் மற்றும் அழகுமிக்கது. இது போன்ற பிரமாண்ட நந்திகளை ராமேஸ்வரம், திருநெல்வேலி, சுசீந்திரம், திருவிடைமருதூர் போன்ற ஆலயங்களில் நாம் காணலாம். இவை, மாக்காளைகள் எனப்படுகின்றன.

    திருவண்ணாமலை நந்தி: அண்ணாமலையில் அருள் மணக்க வலம் வரும் அலங்கார நந்தி... அதிகார நந்தி !

    சாமுண்டிமலை நந்தி: மைசூரையொட்டிய சாமுண்டிமலை மீது ஏறும்போது மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள இந்த பிரமாண்டமான நந்தி கலையழகுடன் கம்பீரமாக காட்சி தருகிறது.

    ஹளேபீடு நந்தி (ஹொய்சளேஸ்வரா ஆலயம்): மாக்கல்லில் வடிக்கப்பட்ட நுணுக்க வேலைப்பாடுகள் உள்ள ஆபரணங்களை உடைய இந்த நந்தியின் கழுத்து மடிப்புகளும், முகத்தில் புடைத்துக் காணப்படும் ரத்த, நாளங்களும் சிற்பியின் திறமையை பறைசாற்றுவன.

    லேபாட்சி நந்தி: ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள இந்த நந்தியே இந்தியாவில் கருங்கல்லில் வடிக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி என்ற பெருமையைப் பெறுகிறது.

    காஞ்சி கைலாசநாதர் ஆலய நந்தி: பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலய நுழைவாயிலிலிருந்து சுமார் 100 அடி தள்ளி ஒரு பெரிய மேடையின் மீது முன்பக்கம் இந்த நந்தி அமைக்கப்பட்டுள்ளது. மேலே சாந்துக்கலவை பூசீ வர்ணம் தீட்டப்பட்டது போன்று அமைக்கப்பட்ட இந்த நந்தி காலமாற்றத்தில் மழையிலும் வெயிலிலும் காய்ந்து வண்ணங்கள் மறைந்தாலும் வனப்பு மாறாது காட்சியளிக்கிறது.

    வைக்கம் நந்தி: கேரள மாநிலம் வைக்கம் மகாதேவ் ஆலய நந்தி. வெளிப்பிரகார நான்கு மூலைகளில் அமைக்கப்பட்டுள்ள நந்திகளுக்கு அழகிய பித்தளைக் கவசம் சாத்தி மெருகிட்டு வைத்துள்ளனர்.

    கங்கைகொண்ட சோழபுரம் நந்தி: தஞ்சைப் பெரிய கோவிலின் தம்பிபோல் காட்சி தரும் சோழீச்வரர் கோவிலில் அமைந்திருக்கும் எழில்மிகு இடம்.

    புனே நகரத்து நந்தி: புனேயில் பாண்டேஸ்வரராக காட்சிதரும் இறைவனின் திருக்கோவிலில் புராதனச் சிறப்போடு, புனிதம் நிறைந்ததாக அமைந்திருக்கும் கருவறை நந்தி.

    காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலய நந்தி: இந்த ஆலயத்தின் முகப்பில் உள்ள நந்தியும் மண்டபமும் ஒரு சேர மிக அழகு. இந்த நந்தியைப் பார்த்தாலே பரவசம் ஏற்படும்.

    நஞ்சனகூடு நந்தி: இந்த பிரமாண்டமான நந்தி கலைநயத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. நஞ்சன்கூடு ஆலயத்தின் உள்ளே நுழையும்போது நம்மை நந்தி பார்ப்பதுபோல் திசை மாறி அமைந்திருப்பது வித்தியாசமானது.

    அதிகார நந்தி: எப்போதும் அமர்ந்தவாறே கம்பீரமாகத் தரிசனமளிக்கும் நந்தி, திருவாரூர் தியாகேசர் சன்னதியில், சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல அவசரமாகப் போகும் ஈசனை ஆச்சரியமுடன் பார்த்தவாறு எழுந்து நின்று கிளம்பும் நிலையில் காட்சியளிக்கிறார். ஏறக்குறைய இதே நிலையில் வடமாநிலம் உ.பி.யில் தென்படுகிறார் என்பதும் விசேஷம்.

    பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களுள் ஒன்றான உஜ்ஜயினி மகா காலேஷ்வர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது குண்டேஷ்வர் மகாதேவ் ஆலயம். கருவறைக்கு முன் காணப்படும் நந்தி தேவர், தொலைவிலிருந்து பார்க்கையில் சாதாரணமாகக் கால்களை மடித்து அமர்ந்திருப்பதாகவே தோன்றும். ஆனால், சற்று அருகில் சென்று உற்று நோக்கினால் உண்மையில் அவர் எழுந்து நிற்கும் நிலையில் தென்படுவதைக் கண்டு ரசிக்கலாம்! இவரையும் லிங்கத் திருமேனியில் விளங்கும் குண்டேஸ்வரரையும் ஒருசேரத் தரிசித்தால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை. சுங்க வம்சத்து அரசர்களால் நிர்மாணிக்கப்பட்டதாகும் இக்கோவில். இதற்கு அருகில்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணரும், அவரது தமையன் பலராமனும் குருகுல வாசம் செய்த சாந்தீபனி மகரிஷியின் ஆசிரமம் உள்ளது.

    • ஆலயத்தில் கொடி மரத்தையொட்டி தலைமை நந்தியாக அமையும் நந்தி ‘ஆன்ம நந்தி’ எனப்படும்.
    • ஒரு சமயம் திரிபுராதிகளை வெல்லுவதற்காக தேவர்கள் சிவபெருமானுக்கு சிறந்ததொரு தேரினைச் செய்து கொடுத்தார்கள்.

    பெரிய சிவாலயங்களில் ஐந்து வகையான நந்திகள் அமைந்திருப்பதைக் காணலாம். இவை

    1) இந்திர நந்தி

    2) வேதநந்தி (பிரம்ம நந்தி)

    3) ஆத்ம நந்தி (கொடி மரத்தின் அருகில் உள்ளது)

    4) மால்விடை (மகாமண்டபத்தில் இருப்பது)

    5) தருமநந்தி என்று அழைக்கப்படும்.

    1.இந்திர நந்தி:

    ஒரு சமயம் இந்திரன் இடப (காளை) வடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கினான். போகங்களின் அதிபதியாகிய இந்திரன் வடிவாக விளங்கும் இந்த நந்தியைப் போகநந்தி என்றும் இந்திர நந்தி என்றும் அழைக்கின்றனர். இந்த நந்தியைக் கோவிலுக்கு வெளியே சற்று தொலைவில் கருவறையை நோக்கியவாறு அமைக்கின்றனர்.

    2.வேத நந்தி:

    பின்னும் ஒருமுறை பிரம்மதேவன் நந்தி வடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கினான். வேதனான பிரம்மன் , நந்தி வடிவம் தாங்கியமையால் இந்த நந்தியை 'வேத நந்தி' , 'வேத வெள்விடை' , 'பிரம்ம நந்தி' என்று பல பெயர்களால் அழைக்கின்றனர். பிரம்மம் என்பதற்கு அளவிட முடியாத பெருமைகளை உடையது என்பது பொருளாகும். அதற்கேற்ப இந்த நந்தியை மிகப்பெரியதாகவும் கம்பீரமாகவும் அமைப்பர். இந்த நந்தியை சுதையினாலும் சுண்ணாம்புச் சாந்தினானும் மிகப்பெரிய அளவில் அமைக்கின்றனர். திருவிடைமருதூர் , ராமேஸ்வரம் , காஞ்சிபுரம் முதலான தலங்களில் இத்தகைய பிரம்மாண்டமான வேத வெள்விடையை பெரிய மண்டபத்துள் காணலாம்.

    3.ஆன்ம நந்தி:

    ஆலயத்தில் கொடி மரத்தையொட்டி தலைமை நந்தியாக அமையும் நந்தி 'ஆன்ம நந்தி' எனப்படும். இது உலக உயிர்களான (பசுக்கள்) ஆன்மாக்கள் பதியாகிய சிவபெருமானைச் சார்ந்து அவனுடைய நினைவில் நிலைபெற்றிருக்க வேண்டிய தன்மையை உணர்த்துகிறது. சிவாலயத்தில் பிரதோஷக் காலங்களில் இந்த நந்திக்குத்தான் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.

    4.மால் விடை:

    ஒரு சமயம் திரிபுராதிகளை வெல்லுவதற்காக தேவர்கள் சிவபெருமானுக்கு சிறந்ததொரு தேரினைச் செய்து கொடுத்தார்கள். தாங்கள் அளிக்கும் இந்தத் தேர் இல்லாமல் சிவபெருமானால் முப்புரங்களை வெல்ல முடியாது என எண்ணினார். அதை உணர்ந்த சிவபெருமான் அந்தத் தேர்தட்டின் மீது தன் வலது காலை ஊன்றி ஏறினார். அவ்வாறு அவர் ஊன்றிய போதே அத்தேரின் அச்சு மளமளவென்று முறிந்தது. தேவர்கள் தாங்கள் செய்தளித்த ஒப்பரிய தேர் பெருமானின் ஒரு கால் அழுத்தத்தைக் கூடத் தாங்க மாட்டாமல் முறிந்தது கண்டு அஞ்சி பெருமானைத் தொழுதனர். அப்பொழுது திருமால் இடபடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கி அவரை மகிழ்வித்தார். இந்நினைவு நீங்காது இருக்கும் பொருட்டு தானும் நந்தி வடிவம் கொண்டு அவர் சன்னிதியில் நிலையாக எழுந்தருளினார். இந்த நந்தி சக்தி பதமான இரண்டாவது ஆவரணத்துள் அமைந்துள்ளதாகும். இதனை 'மால்விடை' , 'மால்வெள்விடை' என்று பலவாறு அழைப்பர்.

    5.தரும நந்தி:

    மகா மண்டபத்தில் அமையும் சிறு நந்தியே தரும நந்தி என்பதாகும். உலகம் சிவபெருமானிடத்தே ஒடுங்குகின்ற சங்கார காலத்தே உலகம் யாவும் அழியும். பிரளயவெள்ளம் பொங்கிப் பெருகி வானளவு எழுந்து உலகினை அழிக்கும் அந்த சங்கார காலத்தில் யாவும் சிவபெருமானிடம் ஒடுங்கும் அப்போது தருமம் மட்டும் நிலைபெற்று இடபடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கும். இவ்வாறு தன்னைத் தாங்கும் இடபத்தை பெருமான் ஆரத்தழுவிக்கொண்டான். இவ்வகையில் தரும நந்தியானது இறைவனைப் பிரியாது அவனுடனேயே இருக்கும். இதை உணர்த்தும் வகையில் இந்த நந்தி இறைவனுக்கு அருகாமையில் மகாமண்டபத்திலேயே எழுந்தருளியிருக்கின்றது.

    பெரிய ஆலயங்களில் இத்தகைய ஐந்து நந்திகள் இருப்பதைக் காண்கிறோம். திருவண்ணாமலை , காஞ்சிபுரம் முதலான தலங்களில் பஞ்ச நந்திகள் சிறப்புடன் போற்றப்படுகின்றன.

    • நந்தி உடல் துளைக்கப்பட்டுள்ள தலம் திருவெண்காடு.
    • நந்தி முகம் திரும்பிய தலம் கஞ்சனூர்.

    1.நந்தியெம்பெருமான் திருமணம்

    பங்குனி மாதம் திருவையாறிலே அவதரித்த நந்திதேவருக்கும் திருமழபாடியில் அவதரித்த சுயசாம்பிகை தேவிக்கும் வளர்பிறை புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெறும்.

    2. நந்தி விலகி இருக்கும் தலங்கள்

    1.திருப்புன்கூர் - நந்தனாருக்காக

    2.திருப்பூந்துருத்தி - சம்பந்தருக்காக

    3.பட்டீஸ்வரம் - சம்பந்தருக்காக

    3.நந்தி இறைவனை நோக்காமல் இறைவர் பார்க்கும் திசையை பார்க்கும் தலங்கள்

    1.திருவலம்

    2.வடதிருமுல்லைவாயில்

    3.செய்யாறு

    4.பெண்ணாடம்

    5.திருவைகாவூர்

    4.நந்தி நின்ற திருக்கோலம்

    1.திருமாற்பேறு (திருமால்பூர் )

    2.திருவாரூர்

    5.நந்தி கொம்பு ஒடிந்த தலம்

    திருவெண்பாக்கம்

    6.நந்தி இறைவனுக்கு பின்னும் உள்ள தலம்

    திருக்குறுக்கை வீரட்டம்

    7.நந்தி சங்கமத் தலம்

    திருநணா (பவானி )

    8.நந்தி சற்று சாய்ந்துள்ள தலம்

    திருப்பூவணம்

    9.நந்தி முகம் திரும்பிய தலம்

    கஞ்சனூர்

    10.நந்தி உடல் துளைக்கப்பட்டுள்ள தலம்

    திருவெண்காடு

    11.நந்தி காது அறுந்த தலம்

    தேப்பெருமாநல்லூர்

    12.நந்தி தலம்

    திருவாவடுதுறை

    13.ஒரே கல்லில் மிகப்பெரிய நந்தி

    தஞ்சாவூர்

    14.மிகப்பெரிய சுதை நந்தி

    1.திருவிடை மருதூர்

    2.இராமேஸ்வரம்

    15.கற்களால் ஆன பெரிய நந்தி

    திருவாவடுதுறை


    போற்றி ஓம் நமசிவாய

    - திருச்சிற்றம்பலம்

    • சிலாதரின் புதல்வன் ஆனதால் “சைலாதி” என்றும் அழைக்கப்பெற்றார்.
    • நந்தீசன் வளர்ந்து உரிய காலத்தில் உபநயனம் நிகழ்ந்தது.

    முனிவர் ஒருவர் பலகாலம் தவம் புரிந்தார். அதன் பயனாக உலகங்கள் பலவற்றைக் காணும் பேறு பெற்றார். யமனுலகு சென்றபோது, முனிவர் அங்கிருந்த கல்மலை ஒன்றைப் பார்த்தார். "இது என்ன?" என்று யமனிடம் கேட்டார்.

    "முனிவரே! நீர் சிறுவயதில் சிவனடியார் ஒருவர் உண்ணும்போது அவருடைய அன்னத்தில் சிறிய கல்லைப் போட்டீர்கள். அது நாள் தோறும் வளர்ந்து வருகிறது. பூவுலகில் உம் காலம் முடிந்து இங்கே வரும் போது இந்த மலையை உண்ணச் சொல்வோம்" என்று யமன் கூற முனிவர் நடுங்கினார்.

    "நான் செய்த தவறுக்கு வேறு பரிகாரமே இல்லையா?" என்றார் முனிவர். "உள்ளது. பூவுலகில் இதே அளவு மலையை நாள்தோறும் பொடித்து உண்டு வந்தால், இங்குள்ள மலை மறைந்து விடும்." என்று யமன் கூற, அவ்வாறே செய்வதாக முனிவர் வாக்களித்தார். முனிவர் பூவுலகுக்கு வந்தார். மலை ஒன்றைத் தேடிக் கண்டறிந்து அதன் கல்லைப் பொடியாக்கி உண்டுவந்தார். ஆகையால் அவரை அனைவரும் சிலாதர் என்று அழைத்தார்கள்.

    சிலாதர் பிரம்மசாரியாக வாழ்ந்து வந்தார். அதனால் அவருடைய முன்னோர் நரகத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருப்பதை அறிந்த சிலாதர், ஒரு நங்கை நல்லாளை மணம் புரிந்து கொண்டார். வெகுகாலமாக அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. சிவபெருமானை வேண்டி பலகாலம் சிலாதர் தவம் புரிந்தார். அவர் மனைவியும் நாள்தோறும் சிவபூஜை செய்து பிள்ளை வரம் வேண்டினாள். உடலெல்லாம் திருநீறு, கழுத்திலே உருத்திராட்ச மாலைகள் அணிந்து, சிவபெருமானையே உடலால், மனத்தால், வாக்கால் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

    சிவபெருமான் அருளிய வண்ணம் ஸ்ரீசைலத்துக்குச் சென்று புத்திர காமேஷ்டி யாகம் செய்யத் தொடங்கினார். முனிவர்களுக்கு அழைப்பு விடுத்தார். யாகத்திற்கான பொருள்களையெல்லாம் சேகரித்தார். தானங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். சிலாதரும் அவருடன் இணைந்து பல ரிஷிகளும் யாகத்தை மிகவும் நியமத்துடன் செய்யலானார்கள். யாக பூமியை சிலாதர் கலப்பையால் உழுதபோது, கலப்பை நுனியில் ஒரு பெட்டி இடித்தது. உடனே சிலாதர் அப்பெட்டியை பூமியிலிருந்து வெளியில் எடுத்துத் திறந்து பார்த்தார். பொன்னாக ஒளிர்ந்த அப்பெட்டியினுள்ளே பால சூரியனைப் போல் ஒளி வீசிய சிறு குழந்தை ஒன்று இருந்ததைக் கண்டார். குழந்தையின் மேனியிலே திவ்ய ஆபரணங்கள் ஒளிர்ந்தன.

    சிலாதர், 'சிவபெருமான் அருளிய தவப்புதல்வர் இவரே' என ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். குழந்தையை வாரி அணைத்து முத்தமிட்டுவிட்டு, மனைவியிடம் அளித்தார். அவள், புதல்வனை இறுக அணைத்து உச்சி முகர்ந்தாள். பாலூட்டி, சீராட்டினாள். அப்போது பிரம்மா, முனிவரை நோக்கி "அனைவருக்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடிய இக்குழந்தைக்கு "நந்தீசன்" என்ற திருநாமம் சூட்டுவோம்" என்றருளினார்.

    சிலாதரின் புதல்வன் ஆனதால் "சைலாதி" என்றும் அழைக்கப்பெற்றார். நந்தீசன் வளர்ந்து உரிய காலத்தில் உபநயனம் நிகழ்ந்தது. குருகுலவாசம் செய்து, அனைத்து சாஸ்திரங்களிலும் தேர்ந்தார். கற்று முடித்ததும் நந்தீசருக்கு மணம் செய்து வைக்கத் தீர்மானித்தார்கள். ஆனால் நந்தீசர் அதற்கு இணங்கவில்லை.

    "சிவத்தைத் துதிப்பேன், பவத்தை விடுவேன்" என்று பெற்றோரிடம் விடைபெற்று தவம் செய்யச் சென்றார். சிலாதரும் அவர் மனைவியும் தடுத்தபோது, அவர்களிடம் தவத்தின் மேன்மையை எடுத்துரைத்து விடை பெற்றார்.

    காட்டில் பஞ்சாக்னி-சுற்றிலும் நான்கு திக்குகளிலும் எரியும் நெருப்பு-வானத்தில் எரிக்கும் சூரியன் ஆகியவற்றின் மத்தியில் நூறாண்டுகள் தவமியற்றினார். அவருடைய கடுமையான தவத்தின் சக்தியால் தேவருலகும் தவ ஒளியால் ஒளிர்ந்தது.

    "எதைக்குறித்து நந்தீசன் தவம் செய்கிறாரோ?" என்று தேவர்கள் கவலை கொண்டனர். பல்லாண்டு காலத் தவத்தின் பயனாக பனிமலைப் பரமேஸ்வரன், நந்தீசன் முன்பு தோன்றினார். விடை மீது வந்து தரிசனம் தந்த ஈசனை நந்தீசர் வணங்கினார்; தொழுதார்; பாதம் பணிந்தார். ஆனந்தப் பரவசமெய்தியவராக "பரமனே! ஈசனே! எந்தையே! எனக்கருள் புரிய வந்த தேவனே!" என்று தோத்திரம் புரிந்தார்.

    "குழந்தாய்! என்ன வரம் வேண்டும்?" என்று இறைவர் குழைந்து கனிவு ததும்பக் கேட்டார்.

    "வேறென்ன வேண்டுவேன்? உம் பாதத்தில் மாறாத பற்றுடன் சிவபக்தியில் சிறந்தவனாக விளங்க வேண்டும் என்பதுதான் யான் வேண்டுவது" என்றார்.

    "அப்படியே விளங்குவாயாக! எம் கணங்களுக்கு அதிபனாக இருப்பாய். என்னுடைய ஆணை எங்கெங்கு செல்லுமோ அங்கெல்லாம் உன் அதிகாரமும் செல்வதாக! அதிகார நந்தியாக விளங்குவாய்" என்றருளினார்.

    "நந்தீசர் எமக்கு மகன், கணாதிபன், அனைவராலும் பூஜிக்கத் தக்கவன். 'சிவஞானத்தை' போதிக்கும் குருவும் இவனே" என்று தேவர்கள் அனைவருக்கும் சிவபெருமான் அறிவித்தார்.

    அது முதல் திருநந்தித் தேவராக நந்தீசர், கயிலைமலையின் வாயிலில் நின்று காத்து வருகிறார்.

    அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மைபூண்டு

    நங்குரு மரபிற்கெல்லா முதற்குரு நாதனாகி

    பங்கயத் துளவ நாளும் வேத்திரப்படை பொறுத்த

    செங்கையெம் பெருமான் நந்தி சீரடிக் கமலம்போற்றி

    • பாறை ஒன்றில் பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
    • தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரே தலம் இது தான்.

    ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீசைலம் சிவனின் ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. இத்தலத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் விசேஷமானது.

    ஸ்ரீசைலம் மலையில் வசித்த சிலாதர் என்ற ரிஷி, குழந்தை வரம் வேண்டி சிவனை வணங்கி வந்தார். அவருக்கு நந்தி, பர்வதன் என்று இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், சிலாதரிடம், "உங்களுக்கு பிறந்திருக்கும் நந்தி சில காலம் தான் பூமியில் வாழ்வார்'' என்றனர். வருந்தினார் சிலாதர். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி, "சிவனைக் குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்!'' என்று சபதம் செய்து, தவத்தை துவங்கினார்.

    சிவபெருமானும் மனம் ஒருமித்த அந்த பிரார்த்தனையை ஏற்று, நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண முடியாது என்ற உத்தரவையும் பிறப்பித்தார். அவருக்கு அருள்புரிந்த சிவன், மல்லிகார்ஜுனர் என்ற பெயரில் இங்கு அருளுகிறார். நேரடியாக பக்தர்களே இவருக்கு பூஜை செய்யலாம் என்பது விசேஷம்.

    பிரதோஷத்தன்று நம் ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், பிறப்பற்ற நிலையை அடையலாம் என்பது நம்பிக்கை.

    முக்கிய சிவத்தலங்களில், இமயமலையிலுள்ள கைலாயம் முதலிடமும், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடமும் வகிக்கிறது. குருக்ஷத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும், கங்கையில் இரண்டாயிரம் முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ, அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒருமுறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது.

    நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து, அதன் மீது சிவன் ஆட்சி புரிவதாகவும் ஐதீகம். இக்கோவிலிலுள்ள நந்தி மிகப்பெரிய அளவில் இருக்கிறது.

    இங்குள்ள அம்பிகை பிரமராம்பாள் எனப்படுகிறாள். 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது. சிவன் சன்னதி கீழே இருக்க, அம்பாள் சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது மற்றொரு விசேஷம்.

    மல்லம்மா என்ற பக்தை இறைவன் மீது கொண்ட பக்தியால் கண்ணீருடன் காட்சியளிக்கும் சிலை பார்ப்பவர்களைக் கவரும். பஞ்சபாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடமும் இங்குள்ளது. பாறை ஒன்றில் பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் பக்தர்கள் தங்க சத்திரங்கள் உள்ளன. திங்கள், வெள்ளியில் கூட்டம் அதிகமாக இருக்கும். தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரே தலம் இது தான்.

    காலை 5.00 மணி முதல் – மதியம் 3.00 மணி வரையும், மாலை 5.30- முதல் இரவு 10.00 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.

    காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு பக்தர்கள் பூஜை செய்ய அனுமதியுண்டு. கட்டணம்,700 ரூபாய்.

    சென்னையில் இருந்து ரெயிலில் செல்பவர்கள் ஓங்கோல் சென்று, அங்கிருந்து பஸ்சில் ஸ்ரீசைலம் செல்லலாம்.

    பஸ்சில் செல்பவர்கள் திருப்பதி சென்று, கர்நூல் செல்லும் பஸ்சில் நந்தியாலில் இறங்கி, ஸ்ரீசைலம் செல்லலாம்.

    மலைப்பகுதியை சுற்றி பார்க்க ஜீப் வசதி உள்ளது. தனியார் வாகனங்கள் இரவு 8.00 மணியிலிருந்து காலை 6.00 மணிவரை மலைப்பாதையில் செல்ல அனுமதி கிடையாது; அரசு பஸ்கள் மட்டுமே செல்லும்.

    • பிரதோஷ கால நேரங்களில் சிவபெருமான் நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுவதாக சைவர்கள் நம்புகிறார்கள்.
    • ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும்.

    தஞ்சாவூர் ஓவிய மரபில் நந்திதேவரின் உருவம் மைசூர் சாமுண்டி மலையில் நந்தி சிலை சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். இவர் சித்தராகவும் அறியப்பெறுகிறார்.

    நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார்.

    "செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்து

    நம் பவமறுத்த நந்திவானவர்"

    எனும் செய்யுளிலிருந்து சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்தி தேவரே என்பது தெளிவாகின்றது. நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை இவரிடமிருந்து சனற்குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தரிசினிகளும், சத்தியஞான தரிசினிகளிடமிருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டாரும் பெற்றனர்.

    பிரதோஷ கால நேரங்களில் சிவபெருமான் நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுவதாக சைவர்கள் நம்புகிறார்கள். எனவே நந்திக்கு விசேட பூசைகளும் திருமுழுக்கு வழிபாடுகள் நடைபெறும்.

    • கைலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக திருமால் கருட வாகனத்தில் சென்றார்.
    • சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று திருமால் சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார்.

    அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.

    சிவாலயங்களில் கொடிமரத்திற்கு அருகே இந்த அதிகார நந்தி அமைக்கப்பெற வேண்டுமென சிவ ஆகமங்கள் கூறுகின்றன.

    கைலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக திருமால் கருட வாகனத்தில் சென்றார். சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று திருமால் சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். சிவதரிசனத்தில் மூழ்கிய திருமால் திரும்பிவர நேரமானதால், கருடன் நந்திதேவனிடம் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முயன்றார். இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார்.

    தன்னைக் காக்க திருமாலை அழைத்தார். சிவதரிசனத்தில் இருந்த திருமால் சிவனிடம் வேண்ட, நந்தியிடம் கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் வேண்டினார். அதனால் கருடன் காக்கப்பெற்றார்.

    சிவன் கோவில்களில் அதிகார நந்திக்கென வாகனம் உண்டு. திருவிழாக்காலங்களில் சிவபெருமான் இந்த அதிகார நந்தி வாகனத்தில் வீதியுலா வருகிறார்.

    • அசுரர்களை நோக்கி செல்லும் வழியில் தேரின் அச்சு முறிந்தது.
    • போரில் பின்தங்காமல் இருப்பதற்காக திருமால் காளையாக வடிவெடுத்து சிவபெருமானை தன் முதுகில் ஏற்றிச் சென்றார்.

    அவதார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் லிங்கத்திற்கு அருகே இருக்கும் கைலாச நந்திக்கு அடுத்து இருப்பதாகும். சிவபெருமானுக்கு வாகனமாக திருமால் நந்தியாக மாறியதால் இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றார்கள்.

    விஷ்ணு நந்தியாக மாறிய கதை

    அசுரர்களின் தொல்லைகளைத் தாங்கமுடியாமல் முனிவர்களும், தேவர்களும் கயிலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். தேவர்கள் ஏற்பாடு செய்திருந்த தேரில் சிவபெருமான் போரிட புறப்பட்டார்.

    அவர் அசுரர்களை நோக்கி செல்லும் வழியில் தேரின் அச்சு முறிந்தது. போரில் பின்தங்காமல் இருப்பதற்காக திருமால் காளையாக வடிவெடுத்து சிவபெருமானை தன் முதுகில் ஏற்றிச் சென்றார். இதனால் ரிஷபாரூடர் என்ற பெயர் சிவபெருமானுக்கு வந்தது. அவ்வாறு விஷ்ணு ரிசபமாக மாறியதால் சிவாலயங்கள் அனைத்திலும் விஷ்ணு நந்தி அமைக்கப்பெறுகிறது.

    இருப்பினும் நான்கு நந்திக்கும் குறைவான சிவாலயங்களில் இந்த விஷ்ணு அவதார நந்தி பிரதிஷ்டை செய்யப்படுவதில்லை.

    • கோவில் பிரதான வாயிலில் வலது பக்கம் பார்த்தபடி அதிகார நந்தி இருப்பார். பின்புறம் ரிஷப நந்தி இருக்கும்.
    • ஒரு ஆலயத்தில் ஏழு நந்திகள் இருக்குமானால் அந்த ஆலயம் மிகச்சிறப்புடையது.

    நந்தி என்ற சொல்லுக்கு எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக்கூடியது பிரதோஷ வழிபாடு.

    பிரதோஷ வேளையில் ஈசனை வழிபட அனைத்தும் சித்திக்கும். இக்காலத்தில் நந்தி தேவரை வழிபடுவது சிறப்பாகும்.

    வலம் வருதல் : சாதாரண நாளில் சிவ சந்நிதியை மூன்று முறை வலம்வர வேண்டும். ஆனால் பிரதோஷ காலத்தில், சோம சூத்திரப் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    சோமசூத்தகப் பிரதட்சணம் என்பது முதலில் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு அப்பிரதட்சணமாக (தட்சிணாமூர்த்தி சன்னதி வழியாக) சண்டிகேசுவரர் சன்னதி வரை சென்று அவரை வணங்கிக் கொண்டு, அப்படியே திரும்பி வந்து, முன்போல் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு, வழக்கம் போல் அப்பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரவேண்டும். அப்படி வலம் வரும் பொழுது சுவாமி அபிஷேக தீர்த்தம் வரும் தொட்டியை (கோமுகத்தை) கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி, அப்பிரதட்சணமாக சன்னதிக்கு வந்து சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வரவேண்டும். இது அநேக அசுவமேதயாகம் செய்த பலனைத் தரும் என சான்றோர் கூறியுள்ளனர். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தன்று இறைவனை இவ்வாறு வலம் வருவதால் இன்னல்கள் நீங்கி நன்மைகள் பெறுவர். பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது.

    எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

    காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.

    எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனையும் நந்தி தேவனையும் வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும் காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும். பிரதோஷ கால நேரங்களில் சிவ பெருமான் நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுவதாக புராணங்களில் நம்பிக்கை . எனவே நந்திக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.

    நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.

    மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோவில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.

    நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் இவர் தேவர்கள் மற்றும் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க வல்ல அதிகாரம் பெற்றவர். பொதுவாக கோவிலில் சிவலிங்கமும் நந்தியும் ஒரே நேர்க்கோட்டில் காட்சி தருவார்கள்.

    ஒரு ஆலயத்தில் ஏழு நந்திகள் இருக்குமானால் அந்த ஆலயம் மிகச்சிறப்புடையது. ஐந்து பிரகாரங்கள் உள்ள கோவில்களில் இந்திர நந்தி, பிரம்ம நந்தி, வேத நந்தி, விஷ்ணு நந்தி, தர்ம நந்தி என ஐந்து நந்திகளை தரிசிக்கலாம். ஒரு சமயம் இந்திரன், நந்தி ரூபத்தில் சிவபெருமானுக்கு வாகனமாக இருந்தார். அவரே இந்திர நந்தி. இந்திரன் போகங்களுக்கு அதிபதியாகத் திகழ்வதால் இவர் 'போக நந்தி' என்றும் அழைக்கப்படுகிறார்.

    பிரம்மன் ஒரு சமயம் நந்தியாகி சிவனைத் தாங்கினார்.

    அதனால் அவர் பிரம்ம நந்தி எனப்பட்டார். பிரம்மன் வேத சொரூபி ஆனதால் இவரே 'வேத நந்தி'யும் ஆனார்.

    முப்புரத்தினை எரிப்பதற்காக சிவபெருமான் தேரில் ஏறியதும் 'தன்னால்தான் திரிபுரம் அழியப் போகிறது' என்று கர்வம் கொண்டது தேர். இதனை அறிந்த சிவபெருமான் தன் கட்டை விரலை தேரில் ஊன்றினார்.

    தேர் உடைந்தது. அப்போது மகாவிஷ்ணு நந்தியாக உருவம் எடுத்து சிவபெருமானை தாங்கினார். அவர்தான் 'மால் விடை' என்று சொல்லக்கூடிய விஷ்ணு நந்தி.

    மகா பிரளய காலத்தில், தர்ம தேவதை நந்தியாக மாறி சிவபெருமானைத் தாங்கியது. அதுதான் 'தர்ம விடை' எனப்படும் தர்ம நந்தி.

    கோவில் பிரதான வாயிலில் வலது பக்கம் பார்த்தபடி அதிகார நந்தி இருப்பார். பின்புறம் ரிஷப நந்தி இருக்கும். மூன்று நந்திகள் உள்ள ஆலயத்தில் இறைவனிடமிருந்து மூன்றாவது கொடி மரத்திற்கு அருகில் உள்ள நந்தி 'ஆன்ம நந்தி' எனப்படும். இந்த நந்தியை 'சிலாதி நந்தி' என்றும் சொல்வர்.

    கயிலையைக் காப்பவர், அதிகார நந்தி. சிவன் தாண்டவம் ஆடும்பொழுது மத்தளம் இசைப்பார்.

    சிவபெருமானின் கட்டளையை நிறைவேற்ற சேனைத் தலைவராகவும் இருப்பவர். பிரதோஷ காலத்தில் நந்தி மிகவும் போற்றப்படுகிறார்.

    நந்தியை தினமும் வணங்குபவர்களுக்கு ஞானம் கைகூடும். குலம் செழிக்கும், சிறப்பான வாழ்வு அமையும் என்பர்.

    ×