என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விமல்"
- நடிகர் விமலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- இந்த வதந்திகளுக்கு விளக்கமளித்து விமல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் விமல், தன் எதார்த்தமான நடிப்பால் தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்க வைத்துக் கொண்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விலங்கு வெப்தொடர் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
விமல்
இவர் தற்போது அறிமுக இயக்குனர் மைக்கில் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து நடிகர் விமலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விளக்கமளித்த விமல்
இந்நிலையில், இந்த தகவல் குறித்து நடிகர் விமல் கூறியதாவது, "எனக்கு மாரடைப்பு எதுவும் இல்லை. நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். தற்போது மைக்கேல் இயக்கத்தில் புதிய படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் நான் மதுவுக்கு அடிமையாகி வீட்டிலேயே ரகசிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. இது யார் செய்கிறார்கள் என்று எனக்கு தெரியும். அதனால் இந்த சின்ன பிள்ளை வேலையெல்லாம் விட்டு விட்டு பிழைக்கிற வழிய பாருங்க. வாழவிடுங்க நீங்களும் வாழுங்க" என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அப்துல் மஜீத்.
- தற்போது இவர் விமல் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான "தமிழன்" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அப்துல் மஜீத். அதன்பின்னர் துணிச்சல், டார்ச் லைட் போன்ற பல படங்களை இயக்கினார். தற்போது விமல், யோகி பாபு நடிக்கும் புதிய படத்தை கான்ஃபிடன்ட் பிலிம் கேப் சார்பில் தயாரித்து இயக்கி வருகிறார். இதில் விமலுக்கு ஜோடியாக சாம்மிகா, ஐஸ்வர்யா தத்தா நடிக்கின்றனர். மேலும் மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், சாம்ஸ், நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படம் தன்னுடைய சுயநலத்திற்காக வியாபாரத்திலும், தொழில் ரீதியாகவும் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். அதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அந்த பாதிப்பில் இருந்து கதாநாயகன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை காமெடி, சென்டிமென்ட, ஆக்ஷன் ரொமான்ஸ் கலந்து இப்படம் உருவாகிறது.
இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு சென்னையிலும் அதன் சுற்றுபுறங்களிலும் நடந்து முடிந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சி வேலூர், ராணிப்பேட்டை பகுதியில் உள்ள அரண்மனை போன்ற இடத்தில் நடக்க உள்ளது. இந்த படத்தை பொங்கல் திருநாளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், தினேஷ், கோபி ஆகியோர் மீது நடிகர் விமல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
- நடிகர் விமல் கொடுத்த வழக்கை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
நடிகர் விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் சினிமா தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், தினேஷ், கோபி ஆகியோர் மீது விருகம்பாக்கம் போலீசார் மோசடி வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கோபி தொடர்ந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் கோகுலகிருஷ்ணன், வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.வெங்கடேஷ், மனுதாரருக்கு எதிரான புகாரில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், "விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை போலீசார் நேர்மையாக விசாரிக்க வேண்டும். குற்றச்சாட்டு முகாந்திரம் இருந்தால், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம், இல்லை என்றால் வழக்கை முடித்து வைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
- இயக்குனர் வேலு தாஸ் இயக்கத்தில் விமல் நடித்து வரும் படம் துடிக்கும் கரங்கள்.
- இதில் விமலுக்கு ஜோடியாக மிஷா நரங் இணைந்துள்ளார்.
பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் விமல், தன் எதார்த்தமான நடிப்பால் தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்க வைத்துக் கொண்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விலங்கு வெப்தொடர் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை அடுத்து 'எங்க பாட்டன் சொத்து', 'மஞ்சள் குடை', 'குலசாமி' போன்ற திரைப்படங்களில் விமல் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து இயக்குனர் வேலு தாஸ் இயக்கத்தில் விமல் கதாநாயகனாக நடித்து வரும் படம் 'துடிக்கும் கரங்கள்'.
இந்த படத்தில் மிஷா நரங், சதீஷ் , சௌந்தர ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ராகவ் பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை ஒடியன் டாக்கீஸ் தயாரிக்கிறது.
'துடிக்கும் கரங்கள்' ஃபர்ஸ்ட் லுக்
இந்நிலையில், 'துடிக்கும் கரங்கள்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விமல், கையில் துப்பாக்கியுடன் நிற்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதளப்பக்கதில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- நடிகர் விமல் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- இப்படத்தை சிம்புதேவன், ஜெயம் ராஜா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவம் ராஜாமணி இயக்கியிருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா - யாஷிகா ஆனந்த் நடிப்பில் ஜூன் 24-ம் தேதி வெளியாகவுள்ள "கடமையை செய்" படத்தை தயாரித்துள்ள கணேஷ் எண்டர்டெயின்மெண்ட் டி.ஆர்.ரமேஷ், நாஹர் பிலிம்ஸ் ஜாகீர் உசேன் இருவரும் அடுத்ததாக விமல் நாயகனாக நடிக்கும் மஞ்சள் குடை படத்தையும் தயாரித்து வருகிறார்கள்.
இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக வால்டர் படத்தில் நடித்த ஷெரின் கஞ்ச்வாலா நடித்துள்ளார். இவர்களுடன் எம்எஸ் பாஸ்கர், ரேணுகா ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ராமர், மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை சிம்புதேவன், ஜெயம் ராஜா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவம் ராஜாமணி கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை பிரவீன் குமார் மற்றும் இசையை ஹரி கவனிக்கின்றனர்.
படம் பற்றி இயக்குனர் சிவம் ராஜாமணி கூறியது, ஃபேமிலி சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் கலந்த கதை இது. இன்றைய சூழலில் மிடில் கிளாஸ் மக்களின் பெரிய போராட்டமே வீட்டு வாடகை தான். அப்படி மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் நாயகன் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஒரு வீடு வாங்க நினைக்கிறார். அதற்கு எப்படி பணம் சேர்க்கிறார்கள் புது வீடு வாங்குவதற்கு அவர்கள் படும் போராட்டங்கள், இறுதியில் வீடு வாங்கினார்களா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் லைவ் லொகேஷனில் படமாக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது என்றார் இயக்குனர் சிவம் ராஜாமணி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்