search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தினேஷ்"

    • அம்மா மற்றும் அவரது 2 மகன்கள் பற்றிய கதை ஆகும்.
    • சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை மிகுந்த இப்படத்திற்கு டோனி பிரிட்டோ இசை.

    இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன் தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் J.பேபி படத்தில் நடிகை ஊர்வசி, தினேஷ் மற்றும் மாறன் நடித்து உள்ளனர்.

    இந்த படம் அம்மா மற்றும் அவரது 2 மகன்கள் பற்றிய கதை ஆகும். சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை மிகுந்த படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் 2-வது சிங்கிள் இன்று வெளியிடப்படும் என்று படக்குழு நேற்று அறிவித்தது.

    ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியான நிலையில், இன்று 2-வது சிங்கிளான "லிட்டில் பிட் கிரேசி" பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

    வருகிற மார்ச் 8- ந்தேதி பெண்கள் தினத்தையொட்டி இந்த படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • நீலம் புரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள புதிய படம் J.பேபி.
    • இந்த படத்தை சுரேஷ் மாரி இயக்கியுள்ளார்.

    இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன் தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் J.பேபி படத்தின் 2-வது சிங்கிள் தயாராகி உள்ளது. இந்த படத்தில் நடிகை ஊர்வசி, தினேஷ் மற்றும் மாறன் நடித்து உள்ளனர்.

    இந்த படம் அம்மா மற்றும் அவரது 2 மகன்கள் பற்றிய கதை ஆகும். இது சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை மிகுந்த படமாகும். டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.

     


    இந்த படத்தின் 2-வது சிங்கில் நாளை (16-ம் தேதி) வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை தமிழகத்தில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.

    ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். படத்தின் இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்தது. இப்படத்துக்கு சென்சார் வாரியம் 'யு' சான்றிதழ் வழங்கி உள்ளது. வருகிற மார்ச் 8- ந்தேதி பெண்கள் தினத்தையொட்டி இந்த படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. 

    • தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் படம் 'லப்பர் பந்து'.
    • இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

    கனா, எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் படம் 'லப்பர் பந்து'. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.



    இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தமன் மேற்கொள்கிறார்.


    லப்பர் பந்து போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ஆயுத பூஜையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.


    • தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர் ரக்‌ஷிதா மகாலட்சுமி.
    • இவர் தமிழில் பிக்பாஸ் 6-வது சீசனிலும் கலந்து கொண்டார்.

    தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் ரக்ஷிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த நடிகர் தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் 6-வது சீசனிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போதுதான் இவர் கணவர் தினேஷிடம் இருந்து பிரிந்து வாழ்வது தெரிய வந்தது. பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரக்ஷிதா மகாலட்சுமி தற்போது பல தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் இருந்து வருகிறார்.


    இந்நிலையில், இவர் மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் கணவர் தினேஷ் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், தான் தினேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும், கடந்த சில தினங்களாக தனது செல்போனுக்கு ஆபாசமாக தினேஷ் மெசேஜ் அனுப்பி தொல்லை செய்வதாக கூறியுள்ளார். மேலும், தனது செல்போன் எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.


    இந்த புகாரின் பேரில் போலீசார் தினேஷை விசாரணைக்கு அழைத்தனர். போலீஸ் நிலையம் வந்த தினேஷ், ரக்ஷிதா வேண்டுமானால் விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடிக் கொள்ளலாம் என தெரிவித்துவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இருவரையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கி வரும் திரைப்படம் தண்டகாரண்யம்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

    2012-ம் ஆண்டு அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இப்படத்தின் கதாநாயகனாக தினேஷ் நடித்திருந்தார். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் மெட்ராஸ், ரஜினி நடிப்பில் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியிருந்தார். தொடர்ந்து சர்பட்ட பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார்.


    இதனிடையே நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பா.இரஞ்சித், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். அட்டக்கத்தி தினேஷ் நடித்திருந்த இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தை அதியன் ஆதிரை இயக்கியிருந்தார்.


    தற்போது பா.இரஞ்சித் மீண்டும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கும் புதிய படத்தை தயாரித்துள்ளார். தண்டகாரண்யம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு பிரதிப் கலிராஜா ஒளிப்பதிவு மேற்கொள்ள இசையை ஜஸ்டீன் பிரபாகரன் கவனிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தண்டகாரண்யம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை இயக்குனர் அதியன் ஆதிரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • இயக்குனர் ராஜ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லோக்கல் சரக்கு’.
    • இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகர் யோகிபாபு, நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'லோக்கல் சரக்கு'. டிஸ்கவர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ்குமார் இயகியுள்ளார். மேலும், இப்படத்திற்கு சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்துள்ளார்.


    லோக்கல் சரக்கு

    இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் 'லோக்கல் சரக்கு' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். குடியால் சாதாரண மனிதரின் வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகளை விளக்குவது போன்று உருவாகியுள்ள இந்த டீசரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.



    • இயக்குனர் பா.இரஞ்சித் தற்போது அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் புதிய படத்தை தயாரித்து வருகிறார்.
    • தண்டகாரண்யம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கி வருகிறார்.

    2012-ம் ஆண்டு அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இப்படத்தின் கதாநாயகனாக தினேஷ் நடித்திருந்தார். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் மெட்ராஸ், ரஜினி நடிப்பில் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியிருந்தார். தொடர்ந்து சர்பட்ட பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார்.

     

    தண்டகாரண்யம் 

    தண்டகாரண்யம் 


    இதனிடையே நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பா.இரஞ்சித் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். அட்டக்கத்தி தினேஷ் நடித்திருந்த இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தை அதியன் ஆதிரை இயக்கியிருந்தார்.

     

    தண்டகாரண்யம் படக்குழு 

    தண்டகாரண்யம் படக்குழு 


    தற்போது பா.இரஞ்சித் மீண்டும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். தண்டகாரண்யம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு பிரதிப் கலிராஜா ஒளிப்பதிவு மேற்கொள்ள இசையை ஜஸ்டீன் பிரபாகரன் கவனிக்கிறார். இந்நிலையில் தண்டகாரண்யம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளதாக படக்குழு புகைப்படங்கள் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

    • இயக்குனர் பா.இரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
    • தற்போது பா.இரஞ்சித் சார்பில் புதிய படத்தின் அறிப்பு வெளியாகியுள்ளது.

    2012-ம் ஆண்டு அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இப்படத்தின் கதாநாயகனாக தினேஷ் நடித்திருந்தார். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் மெட்ராஸ், ரஜினி நடிப்பில் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியிருந்தார். தொடர்ந்து சர்பட்ட பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார்.

     

    இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படக்குழு

    இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படக்குழு


    இதனிடையே நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார்.


    இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

    இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

    அட்டக்கத்தி தினேஷ் நடித்திருந்த இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தை அதியன் ஆதிரை இயக்கியிருந்தார். தற்போது பா.இரஞ்சித் மீண்டும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு பிரதிப் கலிராஜா ஒளிப்பதிவு மேற்கொள்ள இசையை ஜஸ்டீன் பிரபாகரன் கவனிக்கிறார்.


    தண்டகாரண்யம்

    தண்டகாரண்யம்

    இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு தண்டகாரண்யம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், தினேஷ், கோபி ஆகியோர் மீது நடிகர் விமல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
    • நடிகர் விமல் கொடுத்த வழக்கை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    நடிகர் விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் சினிமா தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், தினேஷ், கோபி ஆகியோர் மீது விருகம்பாக்கம் போலீசார் மோசடி வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கோபி தொடர்ந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

    விமல் - சிங்காரவேலன்

    விமல் - சிங்காரவேலன்

    அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் கோகுலகிருஷ்ணன், வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.வெங்கடேஷ், மனுதாரருக்கு எதிரான புகாரில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று வாதிட்டார்.

    விமல்

    விமல்

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், "விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை போலீசார் நேர்மையாக விசாரிக்க வேண்டும். குற்றச்சாட்டு முகாந்திரம் இருந்தால், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம், இல்லை என்றால் வழக்கை முடித்து வைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

    அட்டக்கத்தி படம் மூலம் பிரபலமான தினேஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘அண்ணனுக்கு ஜே’ திரைப்படம் ஆகஸ்ட் 17ம் தேதி வெளியாக இருக்கிறது. #Dinesh #AnnanukkuJai
    அட்டக்கத்தி படம் மூலம் பிரபலமானவர் நடிகர் தினேஷ். இப்படத்தை தொடர்ந்து ‘குக்கூ’, ‘திருடன் போலீஸ்’, ‘விசாரணை’, ‘ஒரு நாள் கூத்து’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் ‘அண்ணனுக்கு ஜே’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

    இதில் தினேஷுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் ராதா ரவி, மயில்சாமி, வையாபுரி போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். அரோல் கொரேலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி ராஜ்குமார் இயக்கி இருக்கிறார். இவர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். 



    தற்கால அரசியலை நையாண்டி செய்யும் இப்படத்தை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் 20 சென்சுரி பாக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை ஆகஸ்டு 17ம் தேதி வெளியிட இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
    ×