search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதிமுறைகள்"

    • ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் ரூ. 10 ஆயிரம் அபராதம்.
    • புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தன.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவருக்கும், அவருடன் பயணிப்பவருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் என்பன உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி தஞ்சையில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு போலீசார் உடனுக்குடன் அபராதம் விதித்து வருகின்றனர்.

    தொடர்ந்து வாகன சோதனை நடந்து வருகிறது.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
    • தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 30.04.2022வரை காலியாக உள்ள திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கழுமலம் மற்றும் வடமருதூர், உளுந்தூர் பேட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நெய்வனை ஆகிய 3 ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடங்கள் மற்றும் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் அ.பாண்டலம் ஊராட்சி மன்ற வார்டு எண்-6, நெடுமானூர் ஊராட்சி மன்ற வார்டு எண்-7, ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தின் பள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற வார்டு எண்-3, உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் எல்லைகிராமம் ஊராட்சி மன்ற வார்டு எண்-1 மற்றும் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தின் நிறைமதி ஊராட்சி மன்ற வார்டு எண்-4 ஆகிய 5 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் காலிப்பதவி யிடங்களுக்கான தற்செயல் தேர்தல்கள் நடத்திடும் பொருட்டு தமிழ்நாடுமாநில தேர்தல் ஆணையத்தால் திட்ட அறிவிக்கை வெளி யிடப்பட்டுள்ளது.

    அதன்படி வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் வருகின்ற 27 - ந் தேதி வரை நடைபெற உள்ளது. வேட்புமனு பரிசீலனை 28- ந் தேதியும், வேட்பு மனுக்கள் திரும்பப் பெறும் நாள் 30- ந் தேதி ஆகும். அடுத்த மாதம் ஜூலை 9-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 12- ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    எனவே மேற்கண்ட பகுதியில் வருகின்ற ஜூலை 14- ந் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேற்கண்ட 8 கிராம ஊராட்சிகள் முழுவதும் 18.06.2022 முதல் 14.07.2022 வரை நடைமுறையில் இருக்கும், மேற்படி பகுதிகளில் பொது இடங்களில் வேட்பாளர்கள் பெயரிலோ, கட்சிகளின் பெயரிலோ மற்றும் அதன் தொடர்பான அனைத்து விதமான வாசகங்கள் அச்சிடப்பட்ட எவ்வித விளம்பரத்தட்டிகளோ விளம்பரப் பட்டிகைகளோ சுவரொட்டிகளோ, விளம்பர படங்களோ இருப்பின் அவற்றை நீக்கவும், அரசுக் கட்டிடம், தனியார் கட்டிட சுவர்களில் வேட்பாளர்கள் பெயரோ, கட்சிகளின் பெயரோ அல்லது அதன் தொடர்பான வாசகங்கள் வண்ணப்பூச்சுகளால் எழுதப்பட்டிருந்தால், அவைகள் அனைத்தையும் இடத்திற்கு தகுந்தாற்போல் வேறுவிதமான வண்ணப்பூச்சு களால் மறைத்து உடனடியாக அழிக்கப்பட வேண்டும் என சம்மந்தப்பட்ட கட்சிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள்.மேற்படி தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    ×